Tuesday, November 18, 2025
Huis Blog Bladsy 2

போதைப் பொருளுடன் கைதான யாழ். பல்கலை மாணவனுக்கு சிறை..!

0

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் குற்றத் தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (16) இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.


இதன் போது, ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 24 வயது மாணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் கந்தர்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (17) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை எதிர்வரும் 30 திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாராணைகளை யாழ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர சுகவீனம் காரணமாக காலமானார்..!

0

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாக 62 வயதில் காலமானார்.

நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.


அத்துடன் அவர் அமைச்சுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பல அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகள் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைத் தீர்த்து வைப்பதில் முன்னோடியாகச் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை பகுதியை உலுக்கிய சம்பவம்; பெற்ற மகளை சீரழித்த தந்தை கைது..!

0

அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியே இச்ச ம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.


குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையாக இருக்கும் 14 வயது மதிக்கத்தக்க இம்மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸாருக்கு நேற்று மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


மேலும் கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர்களின் கிறுக்கல் எழுத்துக்கு தடை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

0

மருத்துவ சபையானது, மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் மருந்துச் சீட்டில் தெளிவு மற்றும் நோயாளியின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது என்று இலங்கை மருத்துவ சபை வலியுறுத்தியுள்ளது.

சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.


இத்தகைய தெளிவின்மை காரணமாக சரியான மருந்தைக் கண்டறிவது கடினமாகி, நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மருத்துவ சபை மேலும் எச்சரித்துள்ளது.

மன்னார் காற்றாலை விவகாரம்; எழுத்துபூர்வ உத்தரவாதத்தை வழங்குமாறு கோரிக்கை..!

0

மன்னார் தீவில் புதிய காற்றாலை மின் நிலையங்கள் கட்டுவதற்கு எதிராக மன்னாரில் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் குழுவினர், NPP அரசாங்கம் எழுத்துபூர்வ உத்தரவாதம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அப்பகுதி மக்களின் அனுமதியின்றி திட்டங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அமைச்சரவைக்கு அண்மையில் அனுப்பிய உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் குழு அவ்வாறு கூறியுள்ளது.


மன்னார் தீவில் புதிய காற்றாலை மின் கோபுரங்கள் கட்டுவதற்கு எதிரான போராட்டத்தின் 100வது நாளை மக்கள் மேற்கொள்வதால், நவம்பர் 11 அன்று மன்னாரில் ஒரு பெரிய அளவிலான தீப்பந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அருட்தந்தை மார்கஸ் அடிகளார் மற்றும் போராட்டக் குழு உறுப்பினர்கள் தலைமை தாங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மைய ஆண்டுகளில் வடக்கு மற்றும் கிழக்கில் மிக நீண்ட காலமாக நடைபெறும் சுற்றுச் சூழல் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக மாறியுள்ள இந்தப் போராட்டம் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளது.

14 புதிய காற்றாலை மின் கோபுரங்களை நிறுவுவதற்கு பல மாதங்களாக நீடித்த எதிர்ப்பைத் தொடர்ந்து இது நிகழ்கிறது, மேலும் சமூக ஒப்புதல் இல்லாமல் திணிக்கப்பட்ட பெரிய அளவிலான எரிசக்தி மற்றும் கனிமத் திட்டங்கள் தொடர்பாக வடகிழக்கு முழுவதும் வளர்ந்து வரும் எதிர்ப்பை பிரதிபலிக்கிறது.


நூறாவது நாளைக் குறிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

1. மன்னார் தீவில் முன்மொழியப்பட்ட 14 கோபுர காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தி இடமாற்றம் செய்ய வேண்டும்.

2. மன்னார் தீவில் எங்கும் இல்மனைட் மணல் அகழ்வுக்கு முழுமையான தடை.

3. தம்பபன்னி மற்றும் நறுவிலிகுளத்தில் உள்ள இரண்டு காற்றாலை மின் திட்டங்களால் ஏற்படும் சேதங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.

அரசாங்கம் அந்தக் கோரிக்கைகளை முறையாக அங்கீகரித்து, இணக்கத்திற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று மக்கள் கூறினர். அப்போதுதான் போராட்டம் முடிவுக்கு வரும் என்று அவர்கள் கூறினர்.


மன்னார் போராட்டம் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது, குறிப்பாக இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமீபத்தில் உள்ளூர்வாசிகளின் ஒப்புதல் இல்லாமல் தீவில் கூடுதல் காற்றாலை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று மின்சார அமைச்சகத்திற்கு அறிவுறுத்திய பின்னரும், அதற்கான முறையான உத்தரவாதங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 12 ஆண்டுகள் கட்டூழிய சிறை..!

0

தனது 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்ட தந்தைக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 12 ஆண்டுகள் கட்டூழிய சிறைத்தண்டனை விதித்தது.

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதால், அபராதம் அல்லது இழப்பீட்டு உத்தரவு இல்லாமல் தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின்படி, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் பாடசாலை விடுமுறை நாட்களில், வீட்டில் வேறு யாரும் இல்லாத போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தனது 14 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.


பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி, அவளை தடுத்து நிறுத்தி, சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, குழந்தையின் தாய் தனது மகளின் உடல் மாற்றங்களைக் கவனித்து அவளிடம் விசாரித்தார். சிறுமி கர்ப்பமாக இருப்பது தெளிவாகத் தெரிந்ததும். அதன் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தை தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

குழந்தை பிறந்த பின்னர், பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.


ஒரு விபத்தைத் தொடர்ந்து, தான் வேலை செய்ய முடியாமல் போனதாகவும், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மது போதையில் இருந்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தான் வேண்டுமென்றே இந்தச் செயலைச் செய்யவில்லை என்றும், வருத்தம் தெரிவித்ததாகவும், குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி 12 ஆண்டுகள் கட்டூழிய சிறைத்தண்டனை விதித்தார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும் – பிமல் ரத்நாயக்க

0

மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


பட்ஜெட் விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

“மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து பேச்சு உள்ளது. ஆம், நாங்கள் தேர்தலை நடத்துவோம். அதில் எதிர்க்கட்சி முழுமையாக தோற்கடிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

சிறையில் 16 வருடங்கள் வாடிய தமிழருக்கு கண்பார்வை இழப்பு..!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தற்கொலை குண்டு தாக்குதல் வழக்கில் 2ஆவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் 16 வருடங்களாக சிறையில் இருப்பதால் கண்பார்வை இழந்துள்ளதாக சட்டத்தரணி அசித விபுலநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி பொரலஸ்கமுவவில் அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் வாகனப் பேரணியில் தற்கொலை குண்டு தாக்கல் செய்ய முயன்ற, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சண்முகராசா கஜபாலினிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின், இரண்டாவது பிரதிவாதிக்கு மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று(13.11.2025) சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.


இந்த தாக்குதலில், தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சண்முகராசா கஜபாலினி அந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இரண்டாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் எனப்படும் நபர் கடுமையான கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பார்வை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சட்டத்தரணி அசித விபுலநாயக்க சமர்ப்பித்த காரணங்களை பரிசீலித்த நீதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார்.

இவர் 16 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எனது கட்சிக்காரர் மற்றும் தற்கொலை குண்டுதாரியை அறியாத மூவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிணை வழங்காமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வழக்கின் சாட்சியங்களின் விசாரணையை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் அசித விபுலநாயக்க நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.


வழக்கை வழிநடத்தும் வழக்கறிஞர் அளித்த சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்டு, வழக்கில் பல ஆவணங்கள் பெறப்படவில்லை என்று கூறி, வழக்கை ஜனவரி 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களான மோரிஸ் என்ற செல்வராசா கிருபாகரன் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகிய இரு பிரதிவாதிகளுக்கும் சட்ட மா அதிபரால் 17 குற்றச்சாட்டுகளின் கீழ் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

NPPயின் பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி..!

0

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது.

பிரதேச சபை தவிசாளர் சஞ்சீவ கருணாசாகர சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் கிடைத்தன.

அதன்படி, பண்டுவஸ்நுவர வரவு செலவுத் திட்டம் 4 பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு மத்தியில் அகலவத்த பிரதேச சபையின் முதல் வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.


தேசிய மக்கள் சக்தியால் நியமிக்கப்பட்ட தலைவர் லலித் குமாரரத்ன, வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.

அங்கு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் கிடைத்தன, மேலும் மூன்று வாக்குகள் வாக்களிப்பில் இருந்து விலகின.

இதன்போது, ​​சபையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சமிந்த ரணவக்கவின் வாக்கு சபை செயலாளரால் தவறாகப் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர் சபையின் செயலாளர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஒன்பது வாக்குகளும் எதிராக எட்டு வாக்குகளும் இருப்பதாகக் கூறினார்.


மூன்று பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த அறிக்கையை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பை வௌியிட்டிருந்தனர்.

இதனால் சபை அமர்வு 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அகலவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெட்கம் இல்லையா உங்களுக்கு; சபையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய அர்ச்சுனா..!

0

மலையக தொழிளார்களின் சம்பளம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரலிங்கம் பிரதீப் நாடாளுமன்றில் உரையாற்றி கொண்டிருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சபையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வரலாற்றிலே தோட்ட தொழிலாளர்களுக்கு அதி கூடிய பணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்குவதாக சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து அவர், வடக்கு கிழக்கு என எல்லா இடங்களிலும் உங்கள் ஆட்சி முடிந்து விட்டது இனி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தான் இடம் பெறும் என நாடாளுமன்றில் கூறினார்.

இதன் போது எழுந்த அர்ச்சுனா எம்பி, அவரின் கூற்றை மறுத்து, ”உங்களுடைய இனத்திற்கே நீங்கள் ஒரு இறாத்தல் பாண் தானே கொடுக்கிறீர்கள் முடிந்தால் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கொடுங்கள்” என கொந்தளித்து பதில் அளித்தார்.

error: Content is protected !!