Tuesday, July 15, 2025
Huis Blog Bladsy 2

குறைந்த வருமானம் கொண்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!

0

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்கான உதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிராம மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 வருடங்களில் 2 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த உதவித் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இளைஞர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலையை நோக்கி பயணிக்கும் தமிழரசு கட்சி..!

0

இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 58 சபைகளில் போட்டியிட்டது. இதில் 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.

ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம், அப்படி பிரதிநிதித்துவத்தைப் பெற்றும் கொண்டோம். மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஆகவே, 58 சபைகளில், 46இல் எமது இலக்கை அடைந்துள்ளோம்.

மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம். இது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி என அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பெருமிதப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், 58 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளதாக பொதுவாக கூறும் சுமந்திரன் வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தில் மூவினங்களும் வாழ்கின்ற நிலையில், வவுனியா மாநகரசபையை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கைப்பற்றிய போதும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மன்னார் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியினால் ஏன் ஒரு சபையைக் கூட கைப்பற்ற முடியவில்லை?

இவ்வாறு தமிழரசுக் கட்சி வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் 3 மாவட்டங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், தனித் தமிழரசின் ஆட்சி அமைக்கும் விதத்தில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கிளிநொச்சிக்குத் தலைமை வகிக்கும் சிறீதரன் எம்.பி, முல்லைத்தீவிற்குத் தலைமை வகிக்கும் ரவிகரன் எம்.பி, மன்னாரிற்குத் தலைமை வகிக்கும் முன்னாள் எம்.பி சாள்ஸ் ஆகியோருடன் தமிழரசின் தலைமை வன்மம் கொண்டு மூவரையும் பழிவாங்கும் நோக்குடனும் கட்சியிலிருந்து ஒதுக்கும் வெளியேற்றும் திட்டத்துடனும் செயற்படுவது தமிழரசின் அரசியலையே முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்பதனை தமிழரசின் தலைமைகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.

தமிழரசு வெற்றி கொண்ட முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட உள்ளுராட்சி சபைகளில் தான் பெயரிடுபவர்களையே தவிசாளர்களாக பிரதி தவிசாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற சுமந்திரனின் சர்வாதிகாரத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலைமை தாங்கி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரவிகரன் எம்.பி மற்றும் மன்னாரிற்குத் தலைமை வகிக்கும் முன்னாள் எம்.பி சாள்ஸ் அந்தப் பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து ஒதுங்கியுள்ளார்.

தற்போதைக்கு தமிழரசுக்கு நெருக்கடிகள் ஏற்படாது விட்டாலும் இனி வரும் தேர்தல்களில் அதற்கான விளைவுகளைத் தமிழரசு கட்சி எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

அதேபோன்று, சிறீதரன் எம்.பியின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசின் ஆட்சியமைந்த கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள சிறீதரனின் தீவிர விசுவாசியை அப்பதவியிலிருந்து அகற்றத் தமிழரசின் தலைமை திட்டமிட்டுள்ளது.

இது அந்த தவிசாளருக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல தமிழரசுக்குள் இருந்து கொண்டே தமிழரசின் தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டைக் கடுமையாக எதிர்க்கும், பகிரங்கமாக விமர்சிக்கும் சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே தமிழரசின் தலைமையால் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே ஏலவே பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல ஆசனங்களை இழந்துள்ளதுடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும், பல சபைகளை இழந்துள்ள தமிழரசுக் கட்சி, தன்னை மீண்டும் வலிதாக்கிக் கொள்ள கட்சிக்குள் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பலப்படுத்தி அனைவரையும் ஒரே வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டுக் கொடுப்புத் தன்மைகளுடன் தமிழரசின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

எனினும் இந்த நேரத்தில் தலைக்கனம், வறட்டுக் கெளரவம், பிடிவாதம், நான் என்ற அகங்காரம் போன்றவற்றால் கட்சிக்குள் பிளவுகளை, குழப்ப நிலைகளை, பழிவாங்கல்களை, பதவி நீக்கங்களை, கட்சி நீக்கங்களை மேற்கொண்டால் தமிழர்களின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி விரைவில் காணாமல் போய்விடும் என்பதனை தமிழரசின் புதிய தலைமைகள் சற்றேனும் தமிழர் நலன் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தவறின், தந்தை செல்வா, “கடவுளாலும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது” என்று கூறியதை “கடவுளாலும் தமிழரசுக் கட்சியை காப்பாற்ற முடியாது” என்று கூற வேண்டிய நிலையே ஏற்படும்.

பொலிஸாரின் மோசமான செயலால் வவுனியாவில் ஒருவர் கொலை..!

0

வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் இன்று(11.07.2025) அப்பகுதியில் பதற்ற நிலையொன்று உருவாகியுள்ளது.

வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்தனர்.

இதன் போது அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை அவர்கள் துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன்றை வீசித் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் நிலைதடுமாறி கீழே வீழ்ந்த மேற்படி நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அவதானித்த மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

பொலிஸாரின் இந்தச் செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்ட நேரமாகச் சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தைப் பொலிஸார் அங்கிருந்து அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள், “நீதிவான் இங்கு வரவேண்டும். அவர் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம்” என்று தெரிவித்தனர்.

இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, இந்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து அதனுடன் தொடர்புடையை சந்தேக நபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அங்கு நின்ற மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், “பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நீதிவான் இங்கு வரவேண்டும்’ என்று விடாப்பிடியாக நின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் கலவரம் ஏற்படுவதற்கான நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்துத் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.

அதன் பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்ற குடும்பஸ்தர் என்று தெரிய வந்துள்ளது.

அவரது சடலத்துக்கு அருகில் மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சினை ஒன்றும் காணப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்புப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டிருந்தனர்.

செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக் கூட்டின் அறிக்கையை சமர்ப்பிக்குக..!

0

யாழ் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப் பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் இடம் பெற்றிருந்தன.

சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர். நேற்றைய தினம் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பையோடு (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப் பையோடு) சிறுவனுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது.

அந்த என்புத் தொகுதிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை, ஆடை, சிறுமிகள் பயன்படுத்தும் பாட்டா நிறுவனத் தயாரிப்பு காலணி, சிறு கண்ணாடி வளையல்கள் என்பனவும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்த மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று நேற்று வழங்கப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ?

0

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணப் பொலிஸாராலேயே தற்போது இந்த வழக்கு கையாளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செம்மணிப் புதைகுழி வழக்கை ஒப்படைக்க பொலிஸ் தரப்பால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நம்பகரமாக அறிய முடிகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான வழக்குகளைத் தற்போது விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில், செம்மணிப் புதைகுழி வழக்கு அவர்களின் கீழ் ஒப்படைக்கப் படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்த விடயத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்குத் தமிழரிடமிருந்து முழுமையாக விலகிச் செல்லும் வடக்கின் கல்வி மரபு..!

0

வடக்கு மாகாணத்தின் கல்வி அமைப்பு, வரலாற்று ரீதியாக, தமிழ் மக்களின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது.

இது பல சவால்களையும், மோதல்களையும் தாண்டி, கல்வியறிவு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளில் முன்னணியில் இருந்த ஒரு பகுதியாகும்.

ஆனால், “கல்வி படிப்படியாக அழிக்கப்படுகிறதா?” என்ற கேள்வி பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விடயமாக இன்று மாறியுள்ளது.

இதற்கு பிரதான காரணம், இன்று வெளியாகிய க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சராசரியில் ஏற்பட்ட பின்னடைவு நிலையே.

வடக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் 69.86% மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கை பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.

கூடுதலாக, மொத்தம் 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும். இதற்கிடையில், 2.34% மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.

இந்த நிலையை நாம் வடக்கில் கருத்தில் கொண்டால் பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களில் 1 அல்லது 2 மாணவர்கள் சித்திப்பெறாத நிலை உருவாகிறது. யுத்தம் முடிவடைந்த 2010ல் கூட வடக்கு நான்காமிடத்தில் இருந்தது.

ஒரு மாணவன் சிறந்த பெறுபேற்றையோ அல்லது மோசமான பெறுபேற்றையோ பெற்றால் அதற்கு பொறுப்பானவர்கள் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே.

அவ்வாறென்றால் மாகாண ரீதியாக பெறுபேறு வீழ்ச்சியடையும் போது அதன் பொறுப்பு யாருடையது? அதன் முழுப் பொறுப்பும் வலய, மகாண பணி்பாளர்கள் மட்டுமன்றி மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரையே சாரும் எனினும் மாகாண சபை இயங்காத நிலையில் அந்தந்த மாகாணங்களின் செயலாளரே முழுமைக்கும் பொறுப்பாளியாவார்.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வட மாகாணம் தொடர்ந்து இறுதி நிலையில் இருப்பது ஏற்க முடியாத விடயமே.

வடக்கிலுள்ள மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாடசாலைகளை விலக்கி, மாகாணப் பாடசாலைகளை கணக்கிட்டால் வடக்கின் கல்வியின் வீழ்ச்சியின் உண்மை முகம் தெரியும்.

இந்த நிலையில் மாகாண சபை முறை என்ற ஒன்றினை உருவாக்கி அதிகாரிகளுக்கு இருக்கக் கதிரையும் 25ம் திகதி குளிரூட்டிக்குள் இருந்தபடி சம்பளம், வாகன பெர்மிட், வெளிநாட்டு சுற்றுலா போன்ற சலுகைகளைப் பெறுவதற்கு மட்டுமா மாகாண சபை முறை? இது எமக்கு தேவையற்ற சுமையாகவே காணப்படுகின்றது.

குறிப்பாக வடக்கில் பொருத்தமற்ற வெளிப்படையற்ற பழிவாங்கல் இடமாற்றங்கள், பழிவாங்கல்கள், அதீத அழுத்தம், அதிகார துஸ்பிரயோகம் என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மாலைக்கும், பொன்னாடைக்கும் ஆசைப்படும் அதிகாரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சூழலில் எவ்வாறு வினைத்திறனையும், விளைதிறனையும் எதிர்பார்க்க முடியும்?

குயிலைப் பிடித்து கூண்டில் அடை்த்து கூவச் சொல்கிறது கல்விப் புலம் ” அது எவ்வாறு கூவும்?

வடக்கின் கல்வியின் அதிபாதாள நிலைக்கு காரணமான அதிகாரிகள் தாமே தமது தவறினை ஏற்று பதவி விலகுவார்களா அல்லது ஆளுநர் பதவி நீக்கம் செய்வாரா? என்பதே மக்களின் முன்னுள்ள வினா.

பொலிஸாரின் அசமந்தத்தால் வவுனியாவில் ஒருவர் கொலை; நீதி கிடைக்குமா?

0

வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிப் பயணித்த இளைஞனை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர் உயிரிழந்துள்ளார். இதனால் இன்று(11.07.2025) அப்பகுதியில் பதற்ற சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை போக்குவரத்து பொலிஸார் தாங்கள் வைத்திருந்த தடியை சில்லுக்குள் செருகி முறையற்ற வகையில் நிறுத்த முயன்றுள்ளனர். இதன் போது, இளைஞன் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால், அப்பகுதியில் அதிகளவான மக்கள் குவிந்துள்ளதோடு மக்கள் கொதி நிலையில் காணப்படும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின..!

0

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

click here

www.doenets.lk

யாழில் மன அழுத்தம் காரணமாக யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு..!

0

யாழ். புத்தூர் – வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியைச் சேர்ந்த லோகவேந்தன் றுகிந்தா (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், முழங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி புத்தூர் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் தாதியர் பயிற்சிநெறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தவிசாளர் தெரிவின் போது தான் தடுத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..!

0

மன்னார் நகரசபை தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவின் போது நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான தன் கட்சியினரே தன்னை அமர்வுக்கு செல்ல முடியாத வகையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தடுத்து வைத்ததாக நகரசபை உறுப்பினர் ஜோன் பொலின்டன் நேற்றைய தினம் (9) பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி மன்னார் நகரசபையின் தலைவர்,உப தலைவர் தெரிவின் போது மஸ்தான் தலைமையில் தொழிலாளர் கட்சி சார்பாக போனஸ் ஆசனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் ஜோன் பொலின்டன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறான பின்னணியில் தன்னை சபை அமர்வுக்கு வரவிடாமல் தனது கட்சியின் தலைவரும் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் தடுத்து வைத்ததாகவும் அதன் காரணமாக தான் சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் தலைவர் தெரிவின் போது தனது ஜனநாயக உரிமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் குறித்த விடயத்தை கூட்டறிக்கையில் விடுமுறை என தெரிவித்த நிலையில் ஏனைய உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் குறித்த உறுப்பினரால் நகர சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சபையில் வாசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த உறுப்பினருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி தொடர்பில் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

error: Content is protected !!