Monday, September 15, 2025
Huis Blog Bladsy 2

யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப் பொருட்களுடன் நான்கு இளைஞர்கள் கைது..!

0

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடனும் , 30 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடனும் 18 , 22 மற்றும் 23 வயதுகளுடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இனப் படுகொலைக்கான வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்தது..!

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டம் உட்பட சர்வதேச சமூகத்தால் விதிக்கப்படும் எந்தவொரு வெளிப்புற செயல்முறைகளையும் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலைப் பின்பற்றுவதற்கான தமது உறுதி மொழியை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் ஜனநாயகம், நீதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் “கணிசமான முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்கக் கோரி வடக்கிலும் போராட்டம்..!

0

பட்டதாரி நியமனத்தில் உள்ளீர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் வட க்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

நாடு முழுவதிலுமுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகளே இவ்வாறு மாவட்டம் தோறும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடுமுழுவதும் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த அவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாக இருவேறு நிலைகளில் தமது பதவியும் சேவையும் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை நாம் நாளாந்தம் எதிர் கொள்வதால் மனதளவிலும் பல்வேறு துயரங்களை எதிர் கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே தமது கோரிக்கைக்கு தீர்வை கோரி இன்று வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம் என சுட்டிக் காட்டியுள்ளனர்.

முன்னதாக, யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய குறித்த ஆசிரியர்கள் வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

ஆளுநர் சந்திப்புக்காக ஆசிரியர் சார்பில் மூவர் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதாக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 18 வயது மாணவனுடன் தவறான உறவு; தாயிடம் சிக்கிய 37 வயதான பெண் அரச ஊழியர்..!

0

யாழ் புறநகர்ப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பெண் அரச ஊழியரும் மாணவனும் அரை குறை ஆடைகளுடன் பட்டப்பகலில் பிடிபட்டுள்ளனர். நேற்று மதியம் 2 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனுடன் வட்சப்பில் நட்பாகிய அரச ஊழியரான பெண் ஒருவர் அம் மாணவனுடன் பல தடவைகள் ஒன்றாக யாழ் புறநகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பல தடவைகள் தங்கியிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

தான் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதையும் அப் பெண்ணுடன் சேர்ந்து சில அந்தரங்க புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பதையும் தனது பாடசாலை நண்பர்களுக்கு குறித்த மாணவன் தெரிவித்து வந்துள்ளான்.

அத்துடன் வெள்ளிக்கிழமை அந்த பெண்ணை தான் மீண்டும் விடுதியில் சந்திக்கவுள்ளதையும் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனால் கடுப்பாயின நண்பர்களின் ஒருவன் அம் மாணவனின் தாயாருக்கு விடுதி உள்ள இடம் தொடங்கி அனைத்து விடயங்களையும் தொலைபேசியில் போட்டுக் கொடுத்ததாகத் தெரிய வருகின்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் தனது தம்பி மற்றும் சில உறவுகளுடன் குறித்த விடுதியை முற்றுகையிட்டு மகனையும் அப்பெண்ணையும் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளார்கள்.

அதே வேளை மாணவனின் உறவுகளால் பெண்ணும் விடுதியை நடாத்தி வந்த வயோதிபத் தம்பதிகளும் நையப் புடைக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

அத்துடன் பெண்ணின் அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றிய மாணவனின் உறவுகள் அவற்றை விடுதிக்கு வெளியே கிழித்து வீசிவிட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிசாருக்கு தெரிவி்க்குமாறு அயலவர்கள் கூறிய போதும் அவர்கள் அவ்வாறு செயற்படாது மாணவனை மாத்திரம் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

மாணவனின் தந்தை கொழும்பில் பிரபல நிறுவனத்தில் பொறியியலாளராக கடமையாற்றி வருகின்றார். மாணவனின் தாயாரும் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிய வருகின்றது.

மாணவனுடன் தங்கியிருந்த இரு பிள்ளைகளின் தாயான பெண் ஊழியரின் கணவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பு; SLPPயின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது..!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மித்தெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மித்தெனியவில் உள்ள தனிநபர் காணியொன்றில் பொலிஸாரினால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், இரசாயனங்கள் கண்டு பிடிக்கப்பட்டதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தொடர்பு பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

சுமார் 50 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய இரசாயன பொருட்கள் தற்போது குறித்த பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்கள், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மேவினால் இறக்குமதி செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கெஹெல்பத்தர பத்மே நுவரெலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு பாகிஸ்தானியர்களின் உதவியுடன் ஐஸ் போதைப்பொருளை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

“பெக்கோ சமன்” என்று அழைக்கப்படும் சந்தேக நபரொருவரின் விசாரணையில் இருந்து பெறப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து, குறித்த சோதனை நடவடிக்கைகள், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.

அங்குணுகொல பெலஸ்ஸவைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் இந்த இரசாயனங்களை மறைத்ததற்கு உதவி செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நெளுக்குளம் பொலிசாரால் மாடு மீட்பு; சந்தேக நபர் விளக்கமறியலில்..!

0

வவுனியா பொன்னாவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரால் தனது மாடு திருடப்பட்டுள்ளதாக வவுனியா நெளுக்குளம் பொலிசிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா பொன்னாவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மாடுகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பில் அவரால் வவுனியா நெளுக்குளம் பொலிசிற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பொன்னாவரசங்குளம் மக்களின் மாடுகளும் திருடப்பட்டு வந்ததால் அம் மக்களால் திருட்டைப் பிடிப்பதற்கான தீவிரமான முயற்சி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டும் வந்துள்ளது.

இந்த நிலையில் நாகர் இலுப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் தொடர்ச்சியாக மாடுகள் திருடப்பட்டு பிரபல அரசியல்வாதி ஒருவரின் பின்னணியில் அறபா நகர் பகுதியில் இயங்கும் தொழுவத்திற்கு இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டு வெட்டுவதற்கு தயார் நிலையில் இருந்த போது பொன்னாவரசங்குள மக்களின் கடும் முயற்சியின் பயனாக மாடு வெட்டும் தொழுவத்திலிருந்து மாடு உயிருடன் மீட்கப்பட்டதுடன் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரால் வவுனியாவின் பல பகுதிகளில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் பசு மாடுகள் பல கடத்தப்பட்டு இறைச்சியாக்கப் பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வறுமைக்குள் சிக்க வைத்து மக்களை அபிவிருத்தி மாயை காட்டி அரசியல்வாதிகளிடம் கையேந்து நிலைக்கு கொண்டு வருவதற்காக எம் மக்களுக்குள் இருக்கும் சமூகப் பொறுப்பற்ற விலைபோன சில நபர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் சதி முயற்சியே இதுவாகும் என்பதுடன் இவர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய கட்சி ஒன்றில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த மாடறுக்கும் தொழுவத்தில் சட்ட நடைமுறையை பின்பற்றாது கள்ள மாடுகள் அறுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் தெற்குத் தமிழ் பிரதேச சபை விசாரணைகளை மேற்கொண்டு குறித்த கொல்களத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவிகள் உட்பட 15 பேர் அதிரடியாகக் கைது..!

0

கிழக்குப் பல்கலைக் கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை செய்த 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதே பல்கலைக் கழகத்தில் படிக்கும் 24 முதல் 26 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகள் குழுவை இந்த மாணவர்கள் பகிடிவதை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகிடிவதை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்..!

0

மன்னார் நகரப் பகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதி இன்றி அசுத்தமாக இயங்கி வந்த உணவகம் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார பரிசோதகர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரிய முறையில் பதிவு செய்யப்படாது, அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது.

குறித்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேற்றப்படாது புழுக்கள் இலையான் உருவாகியும், அதேநேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப் பட்டிருந்தமை, கையுறை, தலையுறை பயன்படுத்தாமலும் அத்துடன் உணவுப் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது

குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகளில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகிறது – ஜனாதிபதி

0

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச் செயல்களில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்றன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் துறையின் 159வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது மக்களின் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு ஆகிய இலங்கை பொலிஸ் திணைக்களம் எதிர்கொண்டுள்ள சவாலாகும். இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களத்திற்காக கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

84 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸ் துறையில் கடமையாற்றுகின்றனர். பொலிஸ் துறையில் உள்ள சில கும்பல்களின் மோசடி செயல்கள் காரணமாக முழுபொலிஸ் துறையின் நற்பெயருக்கும் களங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

அதிகார மட்டத்தில் உள்ளவர்களாக இருக்கலாம் தனிநபராக இருக்கலாம் சட்டவிரோத செயல் எதுவாக இருந்தாலும் அது முழு பொலிஸ் துறையினையும் பாதிக்கும் இலங்கை பொலிஸார் மிகவும் திறமையானவர்கள் எந்தவொரு பிரச்சினையும் துல்லியமாக கையாண்டு சந்தேக நபர்களை கைது செய்யும் தைரியம் கொண்டவர்கள் .

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களை இதுவரையும் கண்டுபிடிக்க முடியாமல் போனமைக்கு பொலிஸார் காரணமல்ல. பொலிஸார் மிகவும் தைரியமாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

ஆனால் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கமுடியாமல் உள்ள கொலைகள் உள்ளிட்ட குற்றசெயல்களுக்கு பின்னால் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்றன அதுவே உண்மை” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பதின்மவயது சிறுமி வன்புணர்வு; இரு பிள்ளைகளின் தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை..!

0

பதின்ம வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இரு பிள்ளைகளின் தந்தைக்கு 12 ஆண்டுகள் கடுங்காவலுடன் கூடிய சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு இருபதாயிரம் ரூபாய் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தவும், தவறினால் மேலும் ஆறு மாத சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கவும், தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த சுதத் ரோஹண என்ற நபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. கடுவலை, வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவருக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், பணம் செலுத்தப்படாவிட்டால், அவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!