Tuesday, August 4, 2026
Huisதாயகம்கண்டி, நுவரெலிய பாடசாலைகள் மீண்டும் நாளை திறப்பு..!

கண்டி, நுவரெலிய பாடசாலைகள் மீண்டும் நாளை திறப்பு..!

சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக நிலவும் மழை மற்றும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்ததன் பின்னர், பாடசாலை நடவடிக்கைகளை நாளை முதல் வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!