Monday, March 17, 2025
Huis Blog

யாழில் கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடால் தவறான முடிவெடுத்த கர்ப்பிணிப் பெண்..!

0

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். இதன் போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பெண் ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக காணப்படுகின்றார். கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 2ஆம் மாதம் 20ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.

இந்நிலையில் அயலவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

மாணவிக்கு LOVE சொன்ன மாணவனுக்கு பிரம்படி-அதிபருக்கு விசாரணை; கொடி கட்டிப் பறக்கும் தமிழர் கல்வி..!

0

மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாக தெரிவித்த சக மாணவனை அதிபர் பிரம்பால் அடித்ததில் மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் நேற்று (15) இடம் பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பாடசாலையில் ஆண் பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலையில் தரம் 10 ம் ஆண்டில் கல்விகற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் ஜ லவ் யூ என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

அது தொடர்பில் மாணவி பாடசாலை அதிபரிடம் சென்று குறித்த மாணவன் ஜ லவ் யு என தெரிவித்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.

வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து மாணவனை பெற்றோர் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதுடன் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் கூறுவதை ஏற்க முடியாது – நாமல் ராஜபக்ஷ

0

இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ் சாட்டுவதை ஏற்க முடியாது.

சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் காலத்துக்கு பொருத்தமற்றவையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ராஜபக்‌ஷக்களை ரணில் விக்கிரமசிங்கமே பாதுகாத்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார். எங்களுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்.

அதிகளவில் வழக்குகளை தாக்கல் செய்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு அலுவலகத்தின் செயலாளராக பதவி வகித்த ஆனந்த விஜேபால தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகிறார். நீங்களே அந்த வழக்குகளை தாக்கல் செய்தீர்கள். அவற்றில் நாங்கள் நீதிமன்றத்தினால் நாங்கள் விடுதலையாகி உள்ளோம்.

கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இறையாண்மைக்ககு எதிராக செயற்பட்டார். ஆனால் தற்போது சர்வதேச ஊடகங்களில் அவர் நாட்டை காட்டிக் கொடுக்காமை தொடர்பில் மகிழச்சியடைகின்றோம்.

எமது அரசியல் மாற்றங்கள் என்பது வேறு விடயமாகும். நம்மிடையே நட்புறவுகள் உள்ளன. 2005இல் ஒரே மேடையில் இருந்தோம். 2015 இல் நீங்களும் ரணிலும் ஒரே மேடையில் இருந்தீர்கள். இப்போது பட்டலந்த அறிக்கையை நீங்களே முன் வைக்கின்றீர்கள். அன்று அந்த அறிக்கையை மறைத்து வைத்துக் கொண்டு இருந்தீர்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் 2005இல் உடன்படிக்கை கைச்சாத்திடும் போது குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவின் அமைச்சரவையிலும் இருந்தீர்கள். அப்போதும் பட்டலந்த அறிக்கை தொடர்பில் பேசவில்லை. ஆனால் இப்போது சர்வதேச ஊடகம் கேட்டதும் அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள்.

நாங்கள் நாட்டை பாதுகாக்க வேண்டும். நாட்டின் முன்னாள் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று எமது இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சென்றால் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ பாதகமாக அமையாது, முழு நாடும் நெருக்கடிக்குள்ளாக நேரிடும்.

சாணக்கியன், இராணுவத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றார். இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பது மட்டுன்றி பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டதாகவும் கூறுகின்றார். ஏதேனும் சம்பமொன்று முன்னாள் இராணுவ சிப்பாயால் நடந்திருக்கலாம்.

ஒரு நபரின் செயற்பாட்டை முழு இராணுவத்தினருடனும் தொடர்புபடுத்த வேண்டாம். பாதாள கும்பல் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதில் தலையீடு செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அந்த நடவடிக்களை எடுக்கும் போது நாங்கள் உங்களை பாதுகாக்கின்றோம்.

பாதாள உலக கும்பலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போது பிலிப்பைன்ஸில் நடந்ததை போன்று மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. இதனால் இறுதியில் நாடே வீழ்ச்சியடையும்.

இங்கே சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் காலத்திற்கு பொருத்தமானது அல்ல. இராணுவத்தினர் அன்று யுத்தம் செய்தனர். அதன் போது ஏதேனும் சம்பவம் இடம் பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்வதல்ல பிரச்சினை, இதனை அரசியல் விடயமாக மாற்றி, வருடங்கள் பலவற்றுக்கு பின்னரும் இதுபற்றி கூறிக் கொண்டு போனால் 1988 இல் நடந்த சம்பவத்தை 2028 இலும் கதைப்போம் என்றால், 2009இல் நடந்தவற்றை 2048 இலும் கதைக்க தயாராவோம் என்றால் அதனூடாக இந்த சமுகத்தில் வெறுப்புணர்வு உருவாகுவதை நிறுத்த முடியாது.

வெறுப்புணர்வற்ற அரசியலை இங்கே கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசு என்ற விடயத்தில் நாம் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்றார்.

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது..!

0

யாழ் போலீஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாக யாழ் போலீசார் தெரிவித்தனர்.

கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 20 லிட்டர் கசிப்பு ஆறு பரல் கோடா என்பன இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ் அத்தியூஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.

விவசாயிகளின் உரமானிய பணத்தில் பெரும் மோசடி; பெண் ஊழியர் கைது..!

0

விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் அநுராதபுர அலுவலகக பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2024/25 பெரும்போக காலப்பகுதிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணத்தில் 2.6 மில்லியன் ரூபாயை சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யாழ் கொள்ளையன் பொலிசில் ஒப்படைப்பு..!

0

கனகராயன்குளம் குறிசுட்ட குளத்தில் நேற்று இரவு(14) சில வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கனகராயன்குளம் குறிசுட்ட குளத்தில் உள்ள சில வீடுகளில் தொலைபேசி மற்றும் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட போது பொது மக்களால் சுற்றிவளைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டு நன்றாக கவனிக்கபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக கனகராயன்குளத்தில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஆசிரியை பிரயதர்சினி பாடசாலையில் மயங்கி வீழ்ந்து மரணம்..!

0

யாழ் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 53 வயதான ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் பாடசாலையில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு இடம்பெற்ற போதே இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த இவரை வைத்தியசாலையில் அனுமதித்த சமயம் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

53 வயதான பிரியதர்ஷினி கனகரெத்தினம் என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாசங் காட்டாததால் கொலை செய்தேன்; பாட்டிமாரை கொலை செய்த சிறுமியின் வாக்குமூலம்..!

0

மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் சிறிதரன் ராஜேஸ்வரி (வயது 68) சக்திவேல் ராஜகுமாரி (வயது 74) ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தினமான நேற்று (14) அதிகாலை சிறிதரன் தர்ஷினி மூதூர் வைத்திய சாலையில் வியாழக் கிழமை இரவுக் கடமைக்காக சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டில் 15 வயதான அவரது மகள், தாயாரான சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி ஆகியோர் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை வேளை குறித்த கொலை இடம் பெற்றுள்ளதாகவும் குறித்த படுகொலைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதன் போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அம்மம்மா தனக்கு ஒரே பேசுவதாகவும், தன்னில் பாசம் இல்லை எனவும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாகவும் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன் பின்னர் குறித்த சிறுமி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ச்சுனா MPயின் சமூகப் பொறுப்பற்ற உரைக்கு உலமா சபை கண்டனம்..!

0

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உரையின் போது (08) முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள செய்தியில் ,

மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாகக் கூடும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறான மத சார்ந்த முக்கியமான விடயங்கள் தொடர்பாக பொது மன்றங்களில் கருத்து வெளியிடும் போது, மிகுந்த நாகரிகத்தோடும், தெளிவோடும், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் நடந்து கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.

மருத்துவர் அர்ச்சுனா உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மதங்கள் பற்றிய முக்கியமான விடயங்களில் தேவைப்படுமாயின் அவற்றை பேசுமுன், அந்தந்த மதங்களின் உயர்பீடங்களிடம் தெளிவு பெற்ற பின்னரே கருத்து தெரிவிப்பது முறையாகும்.

அவ்வாறே இஸ்லாத்தை பற்றிய தெளிவுகள் தேவைப்படுமாயின், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் தொடர்பு கொண்டு, முறையாக தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு வினயமாக கேட்டுக் கொள்வதாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் 700 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்த வதை முகாம்..!

0

குறித்த முகாம் நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. எல்­லோ­ருக்கும் இருப்­பது ஒரே ஒரு மல­ச­ல­கூடம். அது வர்த்­த­மா­னிப்­ ப­டுத்­தப்­பட்ட சிறையும் அல்ல. மனிதன் ஒரு­வனை தடுத்து வைக்க எந்த வகை­யிலும் பொருத்­த­மற்­றது.

தற்போது வெளிநாடொன்றில் தஞ்சமடைந்திருக்கும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி திரு நிஸாந்த டீ சில்வா, திருகோணமலை ‘கன்சைட்-Gun Site’ வதை முகாமை இவ்வாறு அடையாளம் காட்டியிருந்தார்

அதே போல ஐ.நா.வின் குழு­வொன்றும் ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் தொடர்­பான தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மற்றும் ரியல் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆயோயோரின் துணையுடன் கடற்படையால் ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் இயக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்திருந்தது

குறிப்பாக கடற்­ப­டையை சேர்ந்த லெப்­டினன்ட் கொமாண்­டர்­க­ளான சம்பத் முன­சிங்க, ஹெட்டியாராட்சி ஆகியோர் தலை­மை­யி­லான குழுவால் கொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் ‘கன்சைட்-Gun Site’ வதை முகாமில் தடுத்து வைத்து கொ*ன்றமைக்கு ஆதாரங்கள் இருக்கின்றது

அதே போல ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க அவர்களுடன் கோத்தபாயா ராஜபக்சே தொடர்பில் இருந்தார் என்பதை International Truth and Justice Project (ITJP) உறுதிப்படுத்தி இருந்தது.

இது தவிர கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக இருந்த எஸ் எம் பி வீரசேகர , பிரதி கட்டளை அதிகாரியாக இருந்த சிசிர ஜெயக்கொடி போன்றவர்களுடன் கோத்தபாயா ராஜபக்ஷே அவர்களும் ‘கன்சைட்-Gun Site’ செல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பதும் அம்பலப்படுத்தப்பட்டு இருந்தது.

திருமதி யஸ்மின் சூக்காவின் ‘கன்சைட்-Gun Site’ அமைந்திருந்த இடம், அதன் அதிகாரிகள், சித்திரவதைகளை மேற்கொண்டவர்கள், உட்பட்ட பல தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் வழங்கியிருந்தது

இங்கு குறைந்தது 700 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

விசேடமாக யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட பலரும் பருத்தித் துறையிலிருந்து படகுகள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது

அச்செழு இராணுவ முகாம், ஜோசப் இராணுவ முகாம், வேப்பங்குளம் (CID) முகாம், கொழும்பு விமான நிலைய பயங்கரவாத புலனாய்வு திணைக்களம், பூசா தடுப்பு முகாம், கபரண இராணுவ முகாம், வெலிகந்த முகாம் என தமிழர்களை வேட்டையாடிய வதை முகாம்களில் ‘கன்சைட்-Gun Site’ முக்கியமானது

கொழும்பில் பணத்திற்க்காக கடத்தி காணாமலாக்கப்பட்ட ராஜீவ் நாகநாதன் என்கின்ற மாணவர் ‘கன்சைட்-Gun Site’ முகாம் தடுப்பிலிருந்தவாறு தன் தாயாரோடு பேசிய சந்தர்ப்பத்தில் பல உண்மைகளை வெளிப்படுத்திருக்கின்றார்

குறிப்பாக அங்கு சுமார் 18 முதல் 20 வயதுடைய பல இளைஞர் யுவதிகள சுட்டு படுகொலை செய்கின்றனர் என்பதையும் அங்குள்ள கழிவறை எங்கும் இரத்தக்கறை பரவியிருந்ததையும் சொல்லியிருக்கின்றார்

2015 இற்கு பின்னர் ‘கன்சைட்-Gun Site’ முகாம் கொடுமைகள் தொடர்பான முழுமையான தகவல்கள் அம்பலமாகி விட்ட பின்னரும் வசந்த கரன்னகொட உட்பட யாரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை

திரு மைத்திரிபால சிறிசேனா முதல் திரு ரணில் விக்ரமசிங்கே வரையான ஆட்சியாளர்கள் சகல குற்றவாளிகளையும் பாதுகாத்தார்கள்

இது போதாதென்று இன்றைக்கு ‘பட்டலந்த வதை முகாம்’ குறித்து பேசும் ஜேவிபி ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் சூத்திரதாரிகளில் ஒருவரான கடற்படை தளபதி சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க அவர்களை துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமித்துள்ளது

இந்த ஜேவிபி இன்று இலங்கையராக ஒன்றுபடுமாறு எங்களுக்கு அழைப்பு விடுகின்றது. 20 நாட்களாக பொலிஸ் மா அதிபரை ஒழித்து வைத்து நாடகமாடும் ஜேவிபி தன் நிர்வாக பலவீனங்களை மறைக்க பட்டலந்த அறிக்கையை வைத்து வேஷம் போடுகின்றது

இவர்கள் எங்களுக்கு மட்டுமின்றி யாருக்கும் நீதியை பெற்று தர மாட்டார்கள்

error: Content is protected !!