Wednesday, July 16, 2025
Huis Blog

வடக்கின் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு; சிலருக்கு இடமாற்றம்..!

0

வடக்கு மாகாணத்தின் 5 செயலாளர்கள், பதில் ஆணையாளர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று (16.07.2025) குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதன்படி, பருத்தித்துறை பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண சபைக்கு புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிய மு.நந்தகோபாலன், மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கோப்பாய் பிரதேச செயலராகக் கடமையாற்றிய ச.சிவஸ்ரீ வடக்கு மாகாண சபைக்கு புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் பதில் செயலாளராகக் கடமையாற்றிய அ.சோதிநாதன் அதே அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம், மாகாண காணி பதில் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஆ.சிறீ நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய பொ.வாகீசன், வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு; வடக்கிற்கு விதிவிலக்கு?

0

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர், வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என கல்வி பிரதியமைச்சர், டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை வடக்கில் பழிவாங்கும் நோக்கிலும், நியமன நியதிக்குப் புறம்பாகவும் ஆசிரியர் வளத்தை வீண்விரயம் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு பொறுப்பாளி யார்? நீதியான மீளாய்வு அனுர அரசால் மேற்கொள்ளப்படுமா? என்பதே எமக்கு முன்னுள்ள வினா?

மன்னாரில் காற்றாலை திட்டத்தை நிறுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்..!

0

மன்னாரில் மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மக்காஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது வளங்களை அபகரிக்கும் நோக்கத்துடன், கனிய மணல் அகழ்வு தொடர்பாக பல நிறுவனங்கள் மற்றும் திணைக் களங்கள் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கனவே மன்னாரில் நிறுவப்பட்ட 30 காற்றாலைகளை தொடர்ந்து மேலும் 05 காற்றாலைகள் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் இலங்கை மின்சார சபையின் அனுசரணையுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கு நாங்கள் மேலும் ஒரு வார கால அவகாசத்தை வழங்குகின்றோம். குறித்த வேலைத் திட்டத்தை உடனடியாக நிறுத்தி வேறு இடத்திற்கு காற்றாலை திட்டத்தை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிலங்களை பாதுகாக்கும் உரிமை வாழிடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு உள்ளது. அது அவர்களின் பிறப்புரிமை.எனவே அந்த நிலங்களை உங்களால் ஒருபோதும் பறித்து எடுக்க முடியாது.

எனவே இத்திட்டத்தை நிறுத்தாவிட்டால் நாங்கள் அத்திட்டத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டால் உங்களுக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்படும்.

எனவே உங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் – என்றார்.

கனடாவில் கணவன்; யாழ் விடுதியில் குடும்பப் பெண்ணுடன் பொலிஸ் அதிகாரி..!

0

யாழ் திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இளம் குடும்பப் பெண் ஒருவருடன் அறை ஒன்றினுள் தங்கியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அரை குறை ஆடையுடன் ஓடித்தப்பினார். கடந்த ஞாயிறு பகல் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

யாழ் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தாயாரான இளம் குடும்பப் பெண்ணின் கணவன் அண்மையில் கனடா சென்றுள்ளார்.

இந் நிலையில் கணவனின் பெற்றோருடன் குறித்த பெண் தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

பெண்ணின் கணவனின் தம்பி மானிப்பாய் பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் தனது பெற்றோரைப் பார்க்க வரும் சந்தர்ப்பங்களில் தனது அண்ணனின் மனைவியான அண்ணியுடன் சண்டை ஏற்பட்டு அது பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

இந்த சம்பவத்திற்காக குறித்த குடும்பப் பெண் சில தடவைகள் பொலிஸ் நிலையம் சென்று வந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சிறுகுற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.

இதன் காரணமாக விசாரணை என்ற பெயரில் சில தடவைகள் கணவனின் பெற்றோரின் வீட்டுக்கு குறித்த பொலிஸ் அதிகாரி வந்து சென்றதுடன் கணவனின் தம்பியாரையும் பெற்றோரைப் பார்க்க அங்கு வரக்கூடாது என எச்சரிக்கை செய்து ஒரு நாள் பொலிஸ் சிறைக் கூடத்தினுள்ளும் அடைத்து வைத்திருந்துள்ளார்.

இதன் பின்னர் தம்பியார் தனது நண்பர்களுடன் சேர்ந்து புலனாய்வில் இறங்கி பொலிஸ் அதிகாரிக்கும் அண்ணிக்குமான கள்ளத் தொடர்பை கண்டு பிடித்தாகத் தெரிய வருகின்றது.

இது தொடர்பாக பல தடவைகள் கனடாவில் உள்ள அண்ணனுக்கு தெரியப்படுத்தியும் அண்ணன் அதை நம்பாது தனது மனைவியிடம் கூறியதால் குறித்த பொலிஸ் அதிகாரி மீண்டும் தம்பியை பொலிஸ் நிலையம் அழைத்து சிறைக்குள் தள்ளுவேன் என எச்சரித்ததாகவும் தெரிய வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருநெல்வேலிப் பகுதியில் நாள் வாடகைக்கு விடும் வீடு ஒன்றில் பொலிஸ் அதிகாரியும் அண்ணியும் தங்கியிருந்த போது உள்ளே கைத் தொலைபேசிகள் மூலம் வீடியோ எடுத்தபடி நுழைந்த தம்பி மற்றும் அவனது நண்பர்களால் இருவரும் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீடியோ கணடாவில் உள்ள அண்ணனுக்கும் அனுப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இன்று நள்ளிரவு முதல் தொழிற் சங்க நடவடிக்கை; அஞ்சல் தொழிற் சங்க முன்னணி தெரிவிப்பு..!

0

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேரப் பிரச்சினை தொடர்பிலேயே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அஞ்சல் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

2016 முதல் அஞ்சல் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதன் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நீண்ட காலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறு தொழிற்சங்கம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

முல்லைத்தீவு கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி; இருவர் படுகாயம்..!

0

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அவர்களில் உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெண் கான்ஸ்டபிளை ஆபாசமாக திட்டிய உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

0

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய உப பொலிஸ் பரிசோதகர் தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அம்பாந்தோட்டை, தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான உப பொலிஸ் பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை (15) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறுகம் குடாவில் மேலாடை இன்றி வீதியில் சென்ற சுற்றுலாப் பயணி கைது..!

0

அறுகம் விரிகுடா சுற்றுலாப் பகுதியில் மேலாடை இன்றி நடந்து சென்ற தாய்லாந்து சுற்றுலாப் பயணி ஒருவர் பொத்துவில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் காவல் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியக அதிகாரிகளால் நேற்று (1407.2025) அவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரு தங்குமிட விடுதியில் இருந்து மற்றொரு விடுதிக்கு இவ்வாறு மேலாடை இன்றி நடந்து சென்றபோது அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

அந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காவல்துறை அறிக்கைகளின்படி, அவர் அருகில் உள்ள விடுதியில் இருந்து மற்றுமொரு விடுதியின் நுழைவாயில் வரை மேலாடையின்றி நடந்து சென்றுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் இந்த சம்பவத்தைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதற்கமைய உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்தனர்.

பொத்துவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் அவரைக் கண்டுபிடித்து பொத்துவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

1841 ஆம் ஆண்டு 4 ஆம் எண், பொது இடத்தில் அநாகரீகமான அல்லது அநாகரீகமான நடத்தை கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொத்துவில் காவல்துறையினர் தாய்லாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரி அதிபரை வெளியேற்ற கூறி போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவர்கள்..!

0

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபரை பதவி நீக்கம் செய்ய கோரி பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை நேற்று (14) கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தெரிய வருகையில்,

சம்பந்தப்பட்ட அதிபர் இந்தக் கல்லூரிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாகவும், தற்போது முதல்வரின் நிர்வாகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட அதிபரை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அதிபரை நியமிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிபரை நீக்கக் கோரி ஏராளமான மக்கள் போராட்டத்தில் இணைந்த நிலையில் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

யாழில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் கைது..!

0

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!