முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் 18.05.2026இன்று முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் 17ஆம் ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சரியாக காலை 10.30மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் இறுதிப் போரின் போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு – வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீரஞ்சன் ரினோசா என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு ஏனையவர்களாலும் சமநேரத்தில் சுடரேற்றப்பட்டது.
அதனையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உறவுகளை இழந்த உறவுகள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
மேலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நாளின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், மதத் தலைவர்களும், பெருந்திரளான பொது மக்களும் பங்கேற்று தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார். ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (14.05.2026) இடம்பெற்றது. இதன் போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறுகண்டி கோவிலுக்கு கிடைக்கின்ற வருமானங்கள் அனைத்தும் தற்போது பெளத்தசாசன அமைச்சிற்கே செல்கின்றது. குறித்த ஆலயமானது நீதிமன்ற வழக்கில் உள்ள ஓர் ஆலயமாகும். வருடாந்தம் பல மில்லியன் ரூபாய்கள் இவ்வாலயத்திற்கு வருமானமாக கிடைக்கின்றது.
அவ்வாறு கிடைக்கப்பெறும் வருமானங்கள் பெளத்தசாசன அமைச்சிற்கு செல்வதுடன் அவை மீண்டும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு கூட திரும்பி வருவதில்லை. குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்பட்ட பணமானது வெவ்வேறு தேவைகளுக்காக வடக்கு மாகாணத்திற்கு வெளியே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.
அவ்வாறில்லாமல், குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்படுகின்ற பணமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகள் மிகவும் வருமானம் குறைந்த சபைகளாகும். அவற்றின் அபிவிருத்திசார் செயற்பாடுகளுக்கு இப்பணம் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்டத்தில் வேறு அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளுக்கும் அதனை பயன்படுத்தலாம். அதனை இந்த சபை இன்று தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.
அத்துடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கான தனிப்பிரதேசசபையினை அமைக்க வேண்டும் என பலரும் கடந்த காலங்களில் பேசியிருந்தனர். இது தொடர்பில் பாராளுமன்றத்தின் விசேட உரையொன்றின் மூலம் நான் குறித்த கோரிக்கையினை அரசாங்கத்திற்கு முன்வைத்திருந்தேன்.
இந்த பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் இப்பகுதியை சேர்ந்தவர் எனும் வகையில் குறித்த விடயத்தை இன்றைய கூட்டத்தின் தீர்மானமாக நிறைவேற்றி அவருக்கு முன்னிலைப்படுத்துவதுடன் அரசாங்கத்திற்கும் அனுப்பிவைப்போம். இது தொடர்பில் விசேட கரிசனையெடுத்து செயற்படுமாறு தலைவரை கேட்டுக் கொள்கின்றேன்.
அத்தோடு அண்மையில் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த கலந்து கொண்ட வன்னி மாவட்டத்திற்கான கூட்டமொன்றில் அவரால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக, அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அல்லது தனியாருக்கு சொந்தமான காணிகளுக்கு அதற்குரிய ஏதேனும் ஆவனங்கள் இருப்பின் அவற்றை கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளருக்கு வழங்கி அவற்றின் தொகுப்பினை மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு காணி விடுவிப்புக்கான முன்மொழிவாக வழங்க வேண்டும் எனும் தீர்மானத்தினையும் இக்கூட்டத்தில் முன்மொழிகின்றேன் என தெரிவித்தார்.
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் 12.05.2026 இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் நில ஆக்கிரமிப்புக்கள், விவசாயிகள் மற்றும் மீனவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார நிலமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மேலும் இதன்போது முள்ளிவாய்கால் கஞ்சி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வீதிகளில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக இரைச்சல் எழுப்பும் வாகனங்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய மேலதிக உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.
வீதிகளில் உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதை முன்னிலைப்படுத்தி பொலிஸாரினால் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொது வீதிகளில் பயணிக்கும் சில வாகனங்கள் அபாயகரமான முறையில் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் முறையான தகுதிச் சான்றிதழ்கள் இன்றி பழைய வாகனங்களை வீதியில் செலுத்துவது தொடர்பிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட சைலன்சர்களின் (புகை வெளியேற்றும் கருவி) ஒலியை மாற்றுதல், அதிகமாக ஒலி எழுப்பல் மற்றும் ஆபத்தான பல்வேறு உதிரிப் பாகங்களை இணைத்து வாகனங்களை நவீனமயப்படுத்துதல் என்பன மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோத மேலதிக மின் விளக்குகள், ஒளிரும் வர்ண விளக்குகள், பல்வேறு ஒலிகளை எழுப்பும் ஹார்ன்கள், வாகனத்தின் வர்ணத்தை மாற்றுதல் மற்றும் வாகனங்களின் உடல் பகுதிகளில் சித்திரங்களை காட்சிப்படுத்துதல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளன.
அண்மைக்கால விபத்துக்களின் போது முறையான வாகன நிலை அறிக்கை இன்றி நவீனமயப்படுத்தப்பட்ட பேருந்துகள் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை சூழலுக்கு கறுப்புப் புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் 070 – 3500525 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாகன உரிமையாளர்கள் சட்டவிதிமுறைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளளனர்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பெரும் துயரை ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று (11) ஆரம்பமானது.
இதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி – தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது கஞ்சி கூட கிடைக்காது மக்கள் துன்பப்பட்டதனை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது.
பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அந்த முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு காவல் துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதன் போது காவல்துறையினரால் கொண்டுவரப்பட்ட பிணைமுறி நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அண்மையில் அளவீட்டுப் பணி இடம்பெறவிருந்தது.
காணிகளின் உரிமையாளர்கள் அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத போதிலும், விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை தவிசாளர் சுகிர்தன் அடையாளம் காட்டியிருந்தார்.
இதையடுத்து, அந்த வீதியை இடைமறித்து அமைக்கப்பட்டுள்ள எல்லையை நாளைமறுதினத்துக்குள் அகற்றுமாறும், இல்லையேல் பிரதேசசபை அந்த எல்லையை அகற்றும் என்றும் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பிரதேசசபையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, தையிட்டி விகாராதிபதி காவல்துறையிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
அந்த முறைப்பாட்டுக்கு அமையவே தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்துவரும் நடவடிக்கைக்குத் தடைவிதிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
எனினும், காவல்துறையினரின் சமர்ப்பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த விடயத்தில் வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தனையும், வலி.வடக்கு பிரதேசசபை செயலாளரையும் இன்று திங்கட்கிழமை முன்னிலையாகுமாறு நீதிமன்று அறிவுறுத்தல் வழங்கியது.
வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தனின் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையானார். இதன்போது காவலடதுறையினர் சட்டத்தினை நடைமுறைப்படுத்த இடையூறுகள் ஏற்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற போது காவல்துறையினரே அதற்கு எதிராக இருப்பது தையிட்டி விகாராதிபதி பௌத்த மதத்தை தழுவுவதால் காவல்துறையினரும் பௌத்த பீட கட்டளையை ஏற்பது போன்று சமாதான குறைவை ஏற்படுத்தும் என தொடுக்கப்பட்ட இந்த வழக்கினை நீதிமன்றம் முற்றாக நிராகரித்தது.
எனவே இது தொடர்பான கட்டளையினை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளுக்குக் குறுக்காகவே பவானி வீதி அமைந்துள்ளது. எனவே, அந்த வீதியை விடுவித்தால் கணிசமான காணிகள் தானாக விடுவிக்கப்படும் நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் விசேட கூட்டம் இன்று (10.05.2026) மாவட்டக் கிளை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள், கட்சி புனரமைப்பு பணிகள், உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் கட்சி உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் M.A.சுமந்திரன் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, பிரதேச கிளைகள் மற்றும் இளைஞர் மகளீர் அணிகளின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உபதவிசாளர், உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவி, திறைசேரியின் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இணையவழி வணிகங்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள டெலாவேர் நிறுவனத்தின் பெயரில் அந்தக் கணக்கு இருந்து வந்ததாகவும், அதே மாநிலத்தில் உள்ள TD வங்கியின் ஒரு கிளையில் அது பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள அந்த அதிகாரி கூறியுள்ளார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் எவ்வளவு தொகை அந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அது முழுத் தொகையும் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அந்தப் பணம் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளுக்குச் சென்றுள்ளது,” என்றும் சிறிலங்கா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU), அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வுப் பணியகத்தின் (FBI) உதவியைக் கோரிய பின்னரே இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நிதிப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறை , கிடைத்த தகவல்களை FBI மற்றும் அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் பகிர்ந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.
இதையடுத்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டார். இதன்பின், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலாளரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் வழங்கினார்.
முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை திருச்சி கிழக்கில் தவெக சார்பில் நடிகை திரிசா அல்லது தொல் திருமாவளவன் போட்டியிடக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
யாழ். மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வடமாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு வடமாகாண ஆளுநர் உடந்தையாக இருக்கிறார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்ற நிலையில் அது தொடர்பில் நீதிமன்றங்களிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் விசாரணைகளிடம் பெற்று வருகிறது.
அண்மையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டி இடைக்கால தடையையும் விதித்தது.
அதன்பின்னர் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை பரிசீலிப்பதாக ஆணைகுழுக்கு வழங்கிய உறுதிப்பாட்டினை அடுத்து இடைக்கால தடை நீக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
அவ்வாறான நிலையில் தற்போது மேன்முறையீட்டை பரிசீலிக்கிறோம் என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை ஆசிரியர்களுக்கு வழங்குவது ஏற்க முடியாது.
யாழ்.மாவட்டத்தில் ஆங்கில மொழி மூலம் இரசாயனவியல் பாடத்தை 30 பாட வேளை கற்பிக்கின்ற ஆசிரியர் தனது இடமாற்றத்தில் வெளி மாவட்டத்தை இரண்டு வருடங்கள் ஒத்திவைக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.
அவரை தற்போது தென்மராட்சி நிலையத்தில் ஆங்கில மொழி மூலம் இரசாயனவியல் பாடமே இல்லாத வலையத்துக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார்கள்.
அண்மையில் இடம்பெற்ற உயர்தர பரிட்சையில் உயிரியல் விஞ்ஞானத்தில் யாழ் மாவட்டம் முதல் இடத்தை பிடித்த நிலையில் இதனை விரும்பாத தரப்பு யாழ் மாவட்ட கல்வியை அழிப்பதற்கான முயற்சியில் தொடங்கியுள்ளது.
யாழ் வலையத்தில் ஆங்கில மொழி மூலமாக இரசாயனவியல் பாடத்தை கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியரை என்ன தேவைக்காக பாடமே இல்லாத வலயத்துக்கு இடமாற்றம் வழங்குகிறார்கள்.
ஆசிரியரிடம் மாற்றத்தை மேற்கொள்வதில் நாங்கள் எந்த இடையூறும் மேற்கொள்ளப் போவதில்லை ஆனால் சேவையின் தேவை கருதி என முறையற்ற இடமாற்றத்தை மேற்கொள்வதை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது.
அதேவேளை வெளி மாவட்ட மாணவர்கள் பாவம் ஆசிரியர இடமாற்றங்களை செய்வதில் எமது சங்கம் இடையூறு விளைவிப்பதாக சிலர் காட்ட முயல்கின்றனர்.
ஆசிரியர் இடமாற்றம் என்பது முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு விட மாற்றத்தையும் நாம் தட்டிக் கேட்க தயங்க போவதில்லை.
யாழ்.மாவட்டத்தின் கல்வியை அழிப்பதற்கு திரை மறைவில் பாரிய சாதியொன்று இடம்பெற்று வருகிறது அதனை எல்லோரும் அறிந்து கொள்வதோடு விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
எமது தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை விரும்பாத தரப்பினர்கள் ஆசிரியர் விட மாற்றங்களை முறையாற்று வழங்கி மாணவர்களை கல்வியில் பின்னோக்கி நகர்த்துவதே திட்டம்.
அதற்காக உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என்பதற்காக சில அதிகாரிகளும் துணை போவதும் ஆளுநரும் ஒத்தாசை வழங்குவது எமது இனத்திற்கு கிடைத்த சாபமாக பார்க்கிறோம்.
மக்கள் தெளிவாக ஒன்றை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது யாழ்ப்பாணத்தின் கல்வியையும் வடக்கு மாகாணத்தினுடைய கல்வியையும் சிதைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளுகினற முயற்சிக்கு ஆளுநரும் உடந்தையாக இருக்கிறது கவலை தருகிறது
ஆகவே இதற்கு எதிராக அனைத்து தொழிற் சங்கங்களையும் இணைத்து தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை விரைவில் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.