Wednesday, April 23, 2025
Huis Blog

ஜனாதிபதி கனவுடன் வலம் வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில்..!

0

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. அப்போது அதை மீண்டும் யார் கட்ட முடியும் என்பதை மக்கள் நினைவில் கொள்வார்கள்.

கோத்தபய இரவில் குழியில் விழுந்தார் பகலில் அனுர குழியில் விழுந்தார். காலையில் சஜித்துடன் விழத் தயாராக இருக்கும் மூளை உள்ளவர்கள் இலங்கையில் யாரும் இல்லை.

அப்படியானால் மீதமுள்ள ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவே. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக் கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நான் எப்போதும் சொல்வேன், ரணில் விக்ரமசிங்கேவின் முகத்தைப் பார்க்காதீர்கள். அவர் கையை அசைக்கும் விதம் அல்லது மக்களின் தோள்களைத் தொடும் கையைப் பற்றிப் பேசாதீர்கள்.

அவரது மண்டைக்குள் இருக்கும் மூளையைப் பாருங்கள். அவரிடம் வேறு எதுவும் இருந்தாலும் பயனில்லை, அந்த மூளை இல்லாமல், இந்த நாட்டை நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்ப முடியும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு மட்டுமே தலைமை உள்ளது.

அந்த சுயபலத்துடன் நாங்கள் போராடுகிறோம். இந்தத் தேர்தலில் நாங்கள் முன்னேறி வருகிறோம். பெரிய வெற்றி கிடைக்கா விட்டாலும், எங்கள் வெற்றி தெரியும். எங்கள் நாடு வெற்றி பெறும்.” இந்த வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியாகும்.

மாத்தறை சிறைச் சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை..!

0

மாத்தறை சிறைச் சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் இன்று (22) பிற்பகல் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சித்த போதே இந்த சூடான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, சிறைச்சாலையின் வௌியில் பாதுகாப்பிற்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

சிறைச்சாலை வட்டாரங்களின் தகவலின் படி, சக கைதிகளை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகள் குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அமைதியின்மை தொடங்கியது.

ஒரு வார்டைச் சேர்ந்த கைதிகள் வெளியேறி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளவும், வேறு சில கைதிகளுடன் மோதவும் தொடங்கியதால் நிலைமை மேலும் மோசமடைய தொடங்கியது.

இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது – வி. மணிவண்ணன்

0

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்.

தேசிய மக்கள் சக்தி என கூறிக்கொள்ளும் ஜே.பி.வியினர் அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆலயங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எமக்கு வாக்களித்தாலே உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்குவோம் என பகிரங்கமாக மேடையில் ஜனாதிபதி மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து கூறுகின்றார்.

காரைநகர் பிரதேச சபை செயலர், சபையின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆதரவாக பதிவுகள் இடுகின்றார். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தும் இது வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஊழலை ஒழிப்போம், மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் முந்தைய அடக்குமுறையான ஆட்சியாளரான மகிந்தவை விட மிக மோசமாக செயற்படுகின்றனர்.

இவர்களின் ஆட்சி விந்தையானது. ஊழலை ஒழிப்போம் , சட்டவிரோத செயலை இல்லாமல் செய்யவோம் என கூறியவர்கள் தற்போது தம்முடன் போலியான நபர்களையும், சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களையும் தம்முடன் இணைத்து வைத்து உள்ளார்கள்.

காரைநகர் பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் அண்மையில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.

எனவே மிக மோசமான இந்த ஆட்சியாளர்களை எமது மண்ணில் கால் ஊன்ற மக்கள் அனுமதிக்க கூடாது என உரிமையோடு கேட்கிறோம் என தெரிவித்தார்.

முன்னணியின் அமைப்பாளர் திருமதி ஜெகதீஸ்வரன் கைது..!

0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி மருதங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தனது மகனை பார்ப்பதற்காக சென்றவேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார்.

ஜெகதீஸ்வரன் சற்குணதேவி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக போட்டியிட இருந்த நிலையில் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்தநிலையில், இன்று (22) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மருதங்கேணி பொலிஸாரால் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் அவர் கூட்டத்திற்கு செல்லவில்லை. இதனையடுத்து, இன்றையதினம் அவரது வீட்டிற்கு வந்த பொலிஸார் அவர் ஏன் கூட்டத்திற்கு வரவில்லை என்று கேட்டனர்.

அதற்கு நான் இனி வேட்பாளர் இல்லை என்று சற்குணதேவி கூறியபோது, கலந்து கொள்ளச் சொன்னால் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று பொலிஸார் அவரைத் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, எந்த காரணமும் கூறாமல் உடல்நிலை சரியில்லாத அவரது மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சற்குணதேவி தனது வலுவான மற்றும் ஊழலற்ற அரசியல் செயற்பாட்டிற்காக மருதங்கேணி பொலிஸாரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றார்.

மேலும், பொலிஸாரால் அவரது கணவர், மகன் மற்றும் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கவில்லை – பொலிசார்

0

கொழும்பில் சற்றுமுன்னர் சமூக ஆர்வலர் டேன் பிரியசாத்தை குறி வைத்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேன் பிரியசாத் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், இரண்டு தோட்டாக்கள் மார்பிலும் இரண்டு தோட்டாக்கள் தோள்பட்டையில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் வயோதிப பெண் கொலை; சந்தேகநபர் கைது..!

0

யாழ் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை பகுதியில் பெண்ணொருவர் நேற்று (20) கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு திருட வந்த 20 வயதான இளைஞரால் 69 வயதான பெண் தடியினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 20 எழுத்தாணை மனுக்கள் தள்ளுபடி..!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சுமார் 20 எழுத்தாணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நேற்று (21) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ​போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சில சுயேட்சை குழுக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்..!

0

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

போப் பிரான்சிஸ் இன்று (21) காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல், கெவின் ஃபெரெல் அறிவித்தார்.

“இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று கெவின் ஃபாரெல் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

88 வயதான போப், நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று, 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.

நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக் கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை வீழ்த்த வியூகம் வகுக்கும் ரணில்..!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது என்று கூறினார்

எனவே, தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க மற்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டணி அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களை வலியுறுத்தினார்.

ஒவ்வொரு உள்ளூராட்சி அமைப்புகளிலும் பெரும்பான்மையைக் கொண்ட குழுவிற்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது, எனவே வெவ்வேறு அரசியல் குழுக்களை ஒன்றிணைக்க விவாதங்கள் நடத்தப்படுவது கட்டாயமாகும் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் திறன்கள் குறித்து வாக்காளர்கள் இப்போது நல்ல புரிதலைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் கூறினார்.

மன்னாரில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு..!

0

மன்னாரில் பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (20.04.2025) இடம் பெற்றுள்ளதாக முருங்கன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக்கடவையை சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக் கடவையை சேர்ந்த இம்மாணவியை பெற்றோர் முருங்கனில் உயர் கலவிக்காக கன்னியர் குருமட விடுதியில் நேற்றையதினம் (20) இணைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவி நேற்று இரவு தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறை விசாரனையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, உயிரிழந்த மாணவியின் உடலம் மன்னார் மாவட்ட வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

error: Content is protected !!