Tuesday, May 13, 2025
Huis Blog

இன்றைய இராசி பலன்கள் (13.05.2025)

0

மேஷம்

இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மிதுனம்

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்

இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்வது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்

இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கன்னி

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்

இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்

இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்

இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

யாழில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்..!

0

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 17 வயதான சிறுமியொருவர் கடந்த 4 நாட்களின் முன்னர், வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் சிறுமியின் தந்தை இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அவர் தமது வீட்டில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்தும் காணாமல் போய்விட்டதாக கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் சித்தப்பா குடும்பத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

தமது மகள் காணாமல் போன விவகாரத்தில் தனது தம்பிக்கும் தொடர்பிருப்பதாக, சிறுமியின் தந்தையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சித்தப்பாவையும் பொலிசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

இதற்கிடையில், சிறுமி கிளிநொச்சி- கனகபுரத்தில் உள்ள தமது வீட்டில் தங்கியிருந்ததாகவும், அதிகாலை 3.30 மணியளவில் திடீரென காணாமல் போய்விட்டதாகவும், சிறுமியின் சித்தி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

நேற்று சிறுமி தமது வீட்டுக்கு திரும்பி வந்ததாக குறிப்பிட்டு, சித்தப்பா குடும்பத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு சிறுமியை அழைத்து சென்றனர்.

சிறுமி காணாமல் போன முறைப்பாடு இளவாலை பொலிஸ் நிலையத்தில் உள்ளதால், கிளிநொச்சி பொலிசார் சிறுமியை அங்கு அனுப்பி வைத்தனர்.

இளவாலை பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை காதலன் வல்லுறவுக்குள்ளாக்கியதுடன், தனது நண்பனுக்கும் இரையாக்கியதும், சிறுமியின் சித்தப்பா சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கியதும் தெரிய வந்தது.

வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, சிறுமி கிளிநொச்சி, கனகபுரத்திலுள்ள சித்தப்பா குடும்பத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார். சித்தப்பாவுக்கும், சிறுமிக்கும் முறையற்ற தொடர்பு உள்ளதாக சிறுமியின் குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்தது.

சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த சிறுமி, தான் முன்னர் காதலித்த இளைஞனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். முன்னாள் காதலனின் அறிவித்தல்படி அதிகாலை 3.30 மணியளவில் சிறுமி, சித்தப்பா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். தனது நண்பனுடன் முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் காதலன், சிறுமியை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

பூநகரி பகுதியில் வீடொன்றில் சிறுமியை தங்க வைத்து, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார். பின்னர், முச்சக்கர வண்டியில் வந்த நண்பனும், சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்.

இருவரும் சிறுமியை பல முறை வல்லுறவுக்குள்ளாக்கிய பின்னர், முச்சக்கர வண்டியில் சிறுமியை அழைத்துச் சென்று, யாழ்ப்பாணம்- கைதடியில் இறக்கியுள்ளனர். ரூ.1000 பணத்தை சிறுமியிடம் வழங்கி, பேருந்தில் வீடு செல்ல கூறியுள்ளனர்.

அடுத்து எங்கு செல்வதென தெரியாத சிறுமி, பேருந்தில் கிளிநொச்சியிலுள்ள சித்தப்பா வீட்டுக்கே சென்றுள்ளார். அங்கு சித்தப்பாவும் தன்னை பல முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக சிறுமியின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் கிளிநொச்சி மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவில் நடந்ததால், சிறுமி தற்போது கிளிநொச்சி பொலிசாரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பிரான்சில் சீட்டு காசை ஏமாற்றிய சுஜீவன் மீது தாக்குதல்; 4 யாழ் தமிழர்கள் கைது..!

0

சீட்டுப் பிடித்து மோசடி செய்த வவுனியாவைச் சொந்த இடமாகக் கொணட 41 வயதான இரத்தினம் சுஜிவன் எனும் குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பிரான்ஸ் பாரிஸ் வல்மொன்டைஸ் பகுதியில் இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளதாக தெரியவருகின்றது. தாக்குதல் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என கைதானவர்களின் நண்பர்கள் ரெிவித்துள்ளார்கள்.

பிரான்சில் சீட்டுப் பிடிப்பது சட்டவிரோதமான செயலாகும். இருப்பினும் அங்கு வாழும் தமிழர்கள் பலர் பணம் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக பலருடன் சேர்ந்து சீட்டுப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறான ஒரு சீட்டுப்பிடிப்பின் போதே சுஜீவன் என்பவன் சுமார் 90 ஆயிரம் யூரோக்களை தன்னுடன் சீட்டுப்பிடித்தவர்களிடமிருந்து ஏமாற்றியுள்ளான்.

ஏமாற்றியதுடன் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகி வேறு ஓர் இடத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகத் தெரிய வருகின்றது.

பணம் கொடுத்தவர்கள் சுஜீவன் மறைந்து வாழும் இடத்தை மோப்பம் பிடித்து அங்கு நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிய வருகின்றது. இத் தாக்குதலில் படுகாயமடைந்த சுஜீவன் தற்போது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

யாழில் ஊசி மூலம் போதைப் பொருள் செலுத்திய 27 வயது ரொபின்சன் பலி..!

0

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரை நேற்றைய தினம் காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக காணப்பட்டார்.

அவரது சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம் ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் பெற்ற குழந்தைக்கு சாப்பாட்டில் நஞ்சு கலந்து சாப்பிட வைத்த தந்தை தலைமறைவு..!

0

தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார். சிறு பிள்ளை தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறது.யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

6 வயதான சிறு பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியது. குடும்பத்தினர் உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.உணவில் கிருமிநாசினி கலந்து ஊட்டியதாலேயே சிறு பிள்ளை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்ததும், உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய இளவாலை பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவத்தின் பின்னணியில் மனநல காரணங்கள் உள்ளனவா என்றும் பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.

யாழில் மாணவனைத் தாக்கிய ஆசிரியர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

யாழில் மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்புக்கு வருகைதரும் மாணவன் ஒருவர் ‘பட்டப் பெயர்’ கூறி அழைத்ததாகத் தெரிவித்து மாணவரை ஆசிரியர் வகுப்பு வேளையில் அடித்துத்துள்ளார்.

இந்நிலையில் மாணவனின் பெற்றோர் வட்டுக்கோட்டைப் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன் போது கைது செய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியரை எதிர்வரும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

லண்டனுக்கு தனது நண்பியை சந்திக்கச் சென்ற யாழ் நிசாந்தன் மீது கொடூரத் தாக்குதல்..!

0

கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை, நண்பியின் கணவருக்கு தெரியாமல் சந்திக்கச் சென்ற 44 வயது குடும்பஸ்தரான யாழ் அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த நிசாந்தன் மீது நண்பியின் கணவன் நடாத்திய கொலை வெறித்தாக்குதலில் நிசாந்தன் படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இச் சம்பவம் இங்கிலாந்தின் பிறிஸ்டல் பகுதியில் இடம் பெற்றுள்ளது. கனடாவிலிருந்து சில நாட்களுக்கு முன் இங்கிலாந்துக்கு வந்திருந்த நிசாந்தன் தன்னுடன் ஒரே பாடசாலையில் கற்று வந்த நண்பியை சந்திப்பதற்காக நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ஏற்கனவே கணவனால் தாக்கப்பட்டு பொலிசாரின் உத்தரவின் பேரில் நண்பியும் கணவனும் சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

கணவன் மனைவியிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முன்னரே வீட்டில் மனைவிக்குத் தெரியாது பல இடங்களில் ஏற்கனவே இரகசியக் கமராக்கள் பொருத்தி தனது செல்போனில் மனைவியின் நடவடிக்கையை கண்காணித்து வந்ததாகத் தெரிய வருகின்றது.

இந் நிலையிலேயே அங்கு நிசாந்தன் சென்று தங்கியிருப்பதை கணவன் தனது தொலைபேசியில் பார்த்துள்ளார். இதனையடுத்து பொலிசாரின் தடையையும் மீறி வீட்டில் சென்று நிசாந்தன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் மனைவியையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அயலில் இருந்தவர்கள் பொலிசாரிடம் முறையிட்டதாகத் தெரிய வருகின்றது. உடனடியாக அங்கு வந்த பொலிசார் நிசாந்தன் மற்றும் நண்பியை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததுடன் நண்பியின் கணவனையும் விலங்கிட்டு இழுத்துச் சென்றுள்ளார்கள்.

தற்போது நிசாந்தன் இரத்தம் அதிக அளவு வெளியேறிய நிலையில் மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிய வருகின்றது.

நிசாந்தன் அண்மையில் யாழ் வந்து தனது 13 வயதான மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்திருந்தார். அதற்கு லண்டனிலிருந்து நிசாந்தனின் நண்பி தனியே வந்து சிறப்பித்திருந்தாராம்.

அதே போல் கடந்த வருடம் நிசாந்தனின் நண்பியின் மகளின் பூப்புனித நீராட்டுவிழா யாழில் நடந்த போது கனடாவிலிருந்து நிசாந்தனும் தனியே வந்து கலந்து சிறப்பித்திருந்ததாக இருவரது பாடசாலை நண்பர்கள் சிலர் மேலதிக தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.

யாழில் உறவினரின் வீட்டில் விருந்து சாப்பிட்ட புது மாப்பிளை சதீஸ்கரன் பலி..!

0

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபருக்கு கடந்த 09.04.2025 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதிகள் இருவரும் நேற்றையதினம் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு வீடு வந்தவேளை வாந்தி ஏற்பட்டது.

இந்நிலையில் வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றும் வாந்தி குணமாகவில்லை.

பின்னர் சங்கானை பிரதேச வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ். கோப்பாய் வைத்திய சாலை சிற்றூழியர் குணாதரன் உயிரிழப்பு..!

0

கோப்பாய் வைத்திய சாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் இன்றைய தினம் வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நீர்வேலி – பூதர்மட ஒழுங்கை என்ற முகவரியைச் சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது 41) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபர் இன்றையதினம் வாந்தி எடுத்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இதய நோய் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இன்றைய இராசி பலன்கள் (12.05.2025)

0

மேஷம்

இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

ரிஷபம்

இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

கடகம்

இன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்

இன்று சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

துலாம்

இன்று குடும்பத்தில் கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத் துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

விருச்சிகம்

இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு

இன்று பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கும்பம்

இன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

மீனம்

இன்று மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமை மேலோங்கும். பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

error: Content is protected !!