Tuesday, July 15, 2025
Huis Blog

இன்று நள்ளிரவு முதல் தொழிற் சங்க நடவடிக்கை; அஞ்சல் தொழிற் சங்க முன்னணி தெரிவிப்பு..!

0

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேரப் பிரச்சினை தொடர்பிலேயே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அஞ்சல் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

2016 முதல் அஞ்சல் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதன் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நீண்ட காலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறு தொழிற்சங்கம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

முல்லைத்தீவு கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி; இருவர் படுகாயம்..!

0

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அவர்களில் உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெண் கான்ஸ்டபிளை ஆபாசமாக திட்டிய உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

0

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய உப பொலிஸ் பரிசோதகர் தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அம்பாந்தோட்டை, தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான உப பொலிஸ் பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை (15) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறுகம் குடாவில் மேலாடை இன்றி வீதியில் சென்ற சுற்றுலாப் பயணி கைது..!

0

அறுகம் விரிகுடா சுற்றுலாப் பகுதியில் மேலாடை இன்றி நடந்து சென்ற தாய்லாந்து சுற்றுலாப் பயணி ஒருவர் பொத்துவில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் காவல் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியக அதிகாரிகளால் நேற்று (1407.2025) அவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரு தங்குமிட விடுதியில் இருந்து மற்றொரு விடுதிக்கு இவ்வாறு மேலாடை இன்றி நடந்து சென்றபோது அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

அந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காவல்துறை அறிக்கைகளின்படி, அவர் அருகில் உள்ள விடுதியில் இருந்து மற்றுமொரு விடுதியின் நுழைவாயில் வரை மேலாடையின்றி நடந்து சென்றுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் இந்த சம்பவத்தைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதற்கமைய உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்தனர்.

பொத்துவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் அவரைக் கண்டுபிடித்து பொத்துவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

1841 ஆம் ஆண்டு 4 ஆம் எண், பொது இடத்தில் அநாகரீகமான அல்லது அநாகரீகமான நடத்தை கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொத்துவில் காவல்துறையினர் தாய்லாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரி அதிபரை வெளியேற்ற கூறி போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவர்கள்..!

0

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபரை பதவி நீக்கம் செய்ய கோரி பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை நேற்று (14) கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தெரிய வருகையில்,

சம்பந்தப்பட்ட அதிபர் இந்தக் கல்லூரிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாகவும், தற்போது முதல்வரின் நிர்வாகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட அதிபரை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அதிபரை நியமிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிபரை நீக்கக் கோரி ஏராளமான மக்கள் போராட்டத்தில் இணைந்த நிலையில் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

யாழில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் கைது..!

0

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் கையடக்க தொலைபேசி பாவிக்க தடை; ஜனாதிபதியிடம் கோரிக்கை..!

0

பாடசாலை செல்லும் மாணவர்களிடையே கையடக்க தொலைபேசியின் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்து இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்வதை காணக் கூடியதாகவுள்ளது.

இதனை கட்டுப்படத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் போதைப் பாவனை குறைவடைவதை காணக் கூடியதாக தெரியவில்லை.

இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் ஆவார் குறிப்பாக மாணவர் சமுதாயம் ஆகும். மேலும் இப்படி இருக்கும் பொழுது ஒரு படி மேலாக தற்பொழுது மாணவர்களிடையே கையடக்க தொலைபேசியின் பாவனையும் காணக் கூடியதாக உள்ளது. இந்த பாவனையை பாடசாலை மாணவர்கள் மட்டில் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தாங்கள் ஸ்ரீலங்காவை துப்பரவு செய்ய முன் வந்ததை மனதார பாராட்டுகின்றோம். இதனைப் போல் கையடக்க தொலைபேசியின் பாவனையை மாணவர்களிடையே துப்பரவு செய்ய வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம்.

அவையாவன :-

1.பொது இடங்களில் புகைப்பொருள் பாவித்தால் தண்டிக்கப் படுகின்றார்களோ அதே போல் பாடசாலை செல்லும் மாணவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கையடக்க தொலைபேசி பொது இடங்களில் பாவித்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

2. குறிப்பிட்ட மாணவர்கள் வீட்டில் கையடக்க தொலைபேசி பாவிப்பதனை கண்டால் மாணவர்களின் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும்.

3. பிரத்தியேக வகுப்பு நடாத்தும் ஆசிரியர்கள் போன் மூலம் வகுப்பு எடுத்தால் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும்.

கையடக்க தொலைபேசி பாவனையை மாணவர்களிடையே தடை செய்ய வேண்டும் இதற்கு காரணம் பெற்றோருக்கு தெரிந்த விடயங்கள் எல்லாம் இந்த போன் மூலம் மாணவர்கள் அறிகின்றார்கள். ஆகவே கையடக்க தொலைபேசி பாவனையை தடை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

”பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம்” இன்று ஆரம்பம்..!

0

தடை செய்யப்பட்ட ”பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம்” இன்று(14) ஆரம்பமாகின்றது.

“பெருங் கவலையின் உச்சகட்டம் – சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தினால் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், முப்படையினர், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக தௌிவூட்டப்படவுள்ளனர்

நாடளாவிய ரீதியில் 6,172 பாடசாலைகள் மற்றும் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஊடாக குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நிதி மோசடிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு நிதியியல் கட்டமைப்பு தொடர்பில் உறுதிப்பாட்டை பேணுதல் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்

இன்று(14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பிரமிட் எதிர்ப்பு தேசிய வாரம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

வவுனியாவின் வீதியோர சட்டவிரோத கடைகள் முழுமையாக அகற்றம்..!

0

வவுனியாவில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற முற்பட்ட மாநகர சபையினருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு படையினர் களமிறக்கப்பட்டனர்.

வவுனியா இலுப்பையடி பகுதி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் கொரோனாவிற்கு பின்னரான காலப் பகுதியில் அதிகளவான நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்திருந்த நிலையில் வவுனியா மாநகர சபையினால் அதனை அகற்றும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.

போக்குவரத்துக்கு இடையூறாகவும் மக்கள் நடமாடுவதற்கு இடையூறாகவும் குறித்த நடைபாதை வியாபாரம் காணப்படுவதாக தெரிவித்து மாநகர சபையினால் இதனை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக மாநகர முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக குறித்த நடைபாதை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த போது அங்கு வருகை தந்த மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடைபாதை வியாபாரத்தை அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

நீண்ட நேரமாக வியாபாரிகளுக்கும் பொலீசார் மற்றும் மாநகரசபை ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்தது. சபை முதல்வர் கெளரவ காண்டீபன் அவர்கள், ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததால் இனி கால அவகாசம் வழங்க முடியாது என உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் அதன் பின்னரும் சில வியாபாரிகள் முரண்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இறுதியாக வீதியோரத்தில் போடப்பட்டிருந்த சகல தற்காலிக கொட்டகைகளும் அகற்றப்பட்டது.

வவுனியா நடைபாதை வர்த்தக பொருட்களை அள்ளிச்சென்ற மாநகர சபை..!

0

வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை வர்த்தக நிலையங்களே இவ்வாறு மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கு காணப்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் மாநகர சபையின் உழவு இயந்திர பெட்டிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், ஏலவே பொது அறிவித்தல் வழங்கப்பட்ட போதும் கருத்தில் எடுக்காது சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!