பாலாவின் அகரம் அறக் கட்டளையினரால் வவுனியா, புதுக்குளம் சாஸ்திரி கூழாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் முன்பள்ளி திறப்பு விழா இன்றைய தினம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வானது பாலாவின் அகரம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளருமான திரு. பா. பாலேஸ்வரன் தலைமையில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா நகர பிரதேச செயலாளர், கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள் மற்றும் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Recent Comments