Saturday, August 8, 2026
Huisதாயகம்செம்மணியில் தொடர்ச்சியாக வெளிவரும் மனித எச்சங்கள்; இதுவரை 500ஐ கடந்தது..!

செம்மணியில் தொடர்ச்சியாக வெளிவரும் மனித எச்சங்கள்; இதுவரை 500ஐ கடந்தது..!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியானது அனைத்து மூன்று கட்டங்களிலுமாக 100 நாட்கள் களப் பணியை எட்டியுள்ளது.

முதலாம் கட்டம் 9 நாட்களும், இரண்டாம் கட்டம் 45 நாட்களும், தொடர்ந்து நடைபெற்று வரும் மூன்றாம் கட்டம் 46 நாட்களையும் பூர்த்தி செய்துள்ளன, இதன் மூலம் ஒட்டுமொத்த கூட்டுத் தொகை 100 நாட்களாகியுள்ளது.

இன்றைய மூன்றாம் கட்டத்தின் 46 வது நாளில், மேலும் எட்டு மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மூன்று கட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 507 ஆக உயர்ந்ததுள்ளது.

இவற்றுள், 501 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளன

இன்றைய அகழ்வின் போது, மேலும் மூன்று தொல்பொருட்கள், இரண்டு வளையல்கள் மற்றும் ஒரு மேலாடை முள் (shirt pin) மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், செம்மணியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதியைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், புதைகுழியை அண்மித்த இரு இடங்களில் எழுமாற்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது புதிதாக அகழ்வு மேற்கொள்ளப்பட்ட ஒரு இடத்திலிருந்து, ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் கூடுதல் மனித எச்சங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!