முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததை அடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பண்டாரவிற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, அவர் நேற்று (21) சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒரே நேரத்தில் இரண்டு அரசாங்க நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளால் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Recent Comments