Elon Musk-ன் SpaceX நிறுவனத்தின் Starlink செயற்கைக் கோள் தொடர்பு சேவையைப் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் ஆழமான இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ள அனுமதி கோரியிருந்த நிலையில், அந்தக் கோரிக்கையை Musk நிராகரித்ததாக உக்ரைன் ஜனாதிபதி செலன்ஷ்கி தெரிவித்துள்ளார்.
செலன்ஷ்கி வெளியிட்ட தகவலின்படி, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாக Starlink-ஐ ரஷ்யப் பகுதிக்குள் பயன்படுத்த SpaceX ஒப்புதல் அளித்துள்ளதாக அவரிடம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் அவர் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் பின்னர் ரம்ப், Musk அந்தத் திட்டத்தை நிராகரித்து விட்டதாக தமக்குத் தெரிவித்ததாக செலன்ஷ்கி கூறியுள்ளார். Musk இந்த நடவடிக்கை போரை மேலும் தீவிரப்படுத்தக் கூடிய ஆபத்தான நடவடிக்கை எனக் கருதியதாகவும் செலன்ஷ்கி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம், உக்ரைன் போரில் Starlink தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயற்கைக் கோள் வலையமைப்பு இராணுவ நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது இந்திய செய்மதி தொழிநுட்பம் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட பின்னணியில் தற்போது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக, 2022ஆம் ஆண்டிலும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலுள்ள கிரிமியா அருகே உக்ரைன் மேற்கொள்ளத் திட்டமிட்ட கடற்படை ட்ரோன் தாக்குதலுக்கு Starlink சேவையைச் செயல்படுத்துமாறு கேட்ட போது Musk மறுத்திருந்தார்.
அந்த நேரத்தில் தாக்குதல் போரை பெரிய அளவில் தீவிரப்படுத்தக் கூடும் என்ற கவலை அவருக்கு இருந்ததாக பின்னர் வெளியான தகவல்கள் தெரிவித்தன.


Recent Comments