நேற்று இரவு வைத்திய சாலை வளாகத்தில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யக் கோரி, அனுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவர்கள் இன்று அதிகாலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது கடமை அறைக்குச் சென்று கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து விவாதிக்கவும் எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் GMOAவின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டதாக GMOAவின் ஊடகத் தொடர்பாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
நாளை புதன்கிழமை காலை 8 மணிக்குள் சந்தேக நபர் கைது செய்யப்படாவிட்டால், மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவார்கள் என்று அவர் எச்சரித்தார்.
தற்போது, அனுராதபுரம் போதனா மருத்துவ மனையில் அவசர சேவைகள் தவிர அனைத்து ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறினார்.
Recent Comments