இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் விசேட கூட்டம் இன்று (10.05.2026) மாவட்டக் கிளை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள், கட்சி புனரமைப்பு பணிகள், உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும், சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் கட்சி உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் M.A.சுமந்திரன் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, பிரதேச கிளைகள் மற்றும் இளைஞர் மகளீர் அணிகளின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உபதவிசாளர், உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.




Recent Comments