யாழ் – மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார். இதன் போது முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் அவர்களும் இணைந்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் 2026ம் ஆண்டிற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியொதுக்கீட்டினூடாக குறித்த பாடசாலையில் கழிவு முகாமைத்துவ தொட்டியுடன் பாதுக்காப்புக் கூரை அமைத்தல் மற்றும் கூட்டெரு தயாரித்தலுக்கான தொட்டி அமைத்தல் செயற்திட்டத்திற்காக ரூபா. இரண்டு இலட்சம் நிதியொதுக்கீடு மேற்கொண்டிருந்தார்.

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோரின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் போது கல்லூரியின் அதிபருடன் குறித்த வேலைத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியதுடன், பாடசாலையின் தேவைப்பாடுகள், முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.




Recent Comments