Sunday, August 23, 2026
Huisதாயகம்யாழில் பல கோடி பெறுமதியான தங்கநகை கொள்ளை; பெண் ஒருவர் உட்பட மூவர் கைது..!

யாழில் பல கோடி பெறுமதியான தங்கநகை கொள்ளை; பெண் ஒருவர் உட்பட மூவர் கைது..!

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் பொலிசாரால் அதிரடியாகக் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி பொலிசார் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!