Saturday, January 24, 2026
Huisதாயகம்உயர்தர பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு..!

உயர்தர பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு..!

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளிலும் 64.73% பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதிகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெண் பரீட்சார்த்திகளில், 71.93% பேர் பல்கலைக் கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேர் பல்கலைக் கழகத் தகுதியைப் பெற்றுள்ளனர்.

29,244 பரீட்சார்த்திகள் உயர்தர பரீட்சைகளின் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற நிலை காணப்படுவதாகவும், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87% பேரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6% பேரும் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் மேலும் எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டு தேர்வுகளுக்குத் தோற்றிய 456 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்தவும் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!