வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஏற்பாடு செய்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவனது பிரிவுபசார நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (03) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் ஆளுநர் செயலக ஊழியர்களால் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநர் செயலக கணக்காளர் சோ.பிரபு, ஆளுநரின் இணைப்புச் செயலாளர்களான எந்திரி அ.எ.சு.ராஜேந்திரா மற்றும் சர்வானந்தா, ஆளுநரின் ஊடகச் செயலர் கு.டிலீப்அமுதன் ஆகியோர் வடக்கு மாகாண பிரதம செயலரின் சேவையைப் பாராட்டி உரையாற்றினர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் தனது 34 ஆண்டுகால அரச சேவையில் பல்வேறு கௌரவ ஆளுநர்களின் கீழ் ஆளுநரின் செயலாளராக 7 ஆண்டுகள் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments