Friday, January 23, 2026
Huisதாயகம்வவுனியாவில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதி 32 வயதான திவியன் பலி..!

வவுனியாவில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதி 32 வயதான திவியன் பலி..!

வவுனியா ஒமந்தை இலங்கை வங்கிக்கு அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதுண்டு வீதியின் அருகே நின்ற நபருடனும் விசேட அதிரடிப் படையின் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் வீதியின் அருகே நின்றவர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளின் சாரதி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் 32வயதுடைய கண்ணதாசன் திவியன் என்பவரே உயிரிழந்தவராவார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!