வாழைச்சேனை வாகனேரி சந்தியில் இன்று 23.10.2025 இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் ஒன்று வேன் மீது மோதியதில் வேனில் பயணித்த பல நபர்கள் காயமடைந்துள்ளனர்.
பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இந்த விபத்துச் சம்பவத்தின் போது, விபத்துக்குள்ளான வேனில் பயணித்த நபர் ஒருவரின் சாரதி அனுமதிப் பத்திரம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சாரதி அனுமதிப் பத்திரத்தின் விபரம் தெரிந்தவர்கள் அல்லது உரிய நபரின் உறவினர்கள் இருப்பின், வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது அருகில் உள்ள அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recent Comments