Sunday, January 25, 2026
Huisதாயகம்கல்வி மறுசீரமைப்பு; ஆசிரியர்களின் வேலைப்பளு குறைப்பு..!

கல்வி மறுசீரமைப்பு; ஆசிரியர்களின் வேலைப்பளு குறைப்பு..!

பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதன் மூலம், ஆசிரியர்களின் பாடசாலை நேரத்திற்குப் பின்னரான பணிச்சுமை குறையும் என கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், தொகுதி முறை (Module) முறை அறிமுகப்படுத்தப் படவுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்களின் வேலைப்பளு பாடசாலை நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் நீடிக்கப்பட்ட பின்னர், ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.


இந்த கல்வி மறுசீரமைப்பின் மூலம் கல்வித் துறைக்கு மிகவும் பயனுள்ள மாற்றம் நடைபெறுகிறது என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவளை புதிய நடைமுறையில் மாணவர்களுக்கு பயனுள்ள பல விடயங்கள் உள்ள போதும் ஆசிரியர்கள் விடுமுறை பெறுவதில் சிக்கல் நிலை காணப்படுவதுடன் பரிகாரக் கற்பித்தல் செயற்பாட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!