Sunday, January 25, 2026
Huisதாயகம்இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் உள்நுழைந்த நால்வர் கைது..!

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் உள்நுழைந்த நால்வர் கைது..!

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் வந்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னாரைச் சேர்ந்த அந்த வர்த்தகர், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் குறித்த அச்சத்தில் படகு வழியாக இராமேஸ்வரத்திற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.


இராமநாதபுரம் மாவட்டத்தில் அவர், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அவர் மீதான வழக்குகள் தற்போது முடிவடைந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருந்து மீண்டும் மன்னாருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார்.


இராமேஸ்வரம் பகுதியில் இருந்து மன்னாருக்கு படகொன்றில் பயணித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் வைத்துக் குறித்த வர்த்தகர் உட்பட நால்வரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!