2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் கட்டாய இடமாற்றத் திட்டத்தின் கீழ் இடமாற்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.
மேலும் மேல்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையையும் கோடிட்டுக் காட்டியுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, ஆரம்பப் பிரிவு (பொது) பாடப்பிரிவில் உள்ள ஆசிரியர்களுக்கான இடமாற்ற உத்தரவுகள், 2026 ஜனவரி 6 முதல் இணையத்தில் கிடைக்கும்.
இந்த நிலையில்,தேசிய பாடசாலை ஆசிரியர்கள் nstt.moe.gov.lk என்ற இணையத்தின் மூலம் உள்நுழைந்து அவர்களின் இடமாற்ற உத்தரவுகளைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்ற முடிவுகளில் அதிருப்தி அடையும் ஆசிரியர்கள், அதே இணையத்தை பயன்படுத்தி, ஜனவரி 6 முதல் ஜனவரி 20 வரை வருடாந்த இடமாற்ற மறுஆய்வுக் குழுவிற்கு மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Recent Comments