Thursday, February 5, 2026
Huisதாயகம்சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கானகு முக்கிய அறிவித்தல்..!

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கானகு முக்கிய அறிவித்தல்..!

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில் 2025 (2026) பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் இருந்தால், இம் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்துக்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3545 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏற்கனவே அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் காணப்படின், பாடசாலை அதிபர்கள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று, தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!