Tuesday, March 17, 2026
Huisதாயகம்மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை..!

மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை..!

சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை, சமூகசேவைகள் அமைப்புக்களுடன் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தடை செய்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சம்மாந்துறை பிரதேச சபை சிகை அலங்கரிப்பாளர்ளை அறிவுறுத்தி உள்ளது.

இதை மீறும் சிகை அலங்கரிப்பாளர்களுக்கான கடை உரிமப்பத்திரம் இரத்து செய்யப்பட்டு, அவ்வுரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் அறிவித்துள்ளது.

இத் தீர்மானத்தினை முன்னுதாரணமாக ஏனைய சபைகளும் முன்னெடுக்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!