Wednesday, March 18, 2026
Huisதாயகம்2025 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

2025 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

2025 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கா.பொ.த சாதாரண பரீட்சை தாள்கள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் சாதாரண பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, செய்முறைத் பரீட்சைகள் முடிந்தவுடன் சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!