Saturday, April 25, 2026
Huisதாயகம்தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு ‘ஸ்டைல் கட்’ முடி வெட்டிய சலூன்களுக்கு சீல்..!

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு ‘ஸ்டைல் கட்’ முடி வெட்டிய சலூன்களுக்கு சீல்..!

பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைல்’ என்ற பெயரில் விசித்திரமாக முடி வெட்டி விட்ட சலூன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு சிகை அலங்கார நிலையங்கள், மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாமல், ஒழுங்கற்ற முறையில் முடி வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து,பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்களுக்கு முறையாக முடி வெட்டாதது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சலூன் உரிமையாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இரண்டு சிகை அலங்கார நிலையங்களும் தற்காலிகமாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!