முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப் பிலவு கிராம மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக 18.07.2026 இன்று தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25ஆவது நாள் தொடர் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் தமது போராட்டம் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Recent Comments