பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக பொய் தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகபர், இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர், ஊடக சந்திப்பொன்றை நடத்தி விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத பொய் தகவல்களை வெளியிட்டதற்காக நேற்று (18) கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Recent Comments