Saturday, August 29, 2026
Huisதொழிநுட்பம்இலங்கையில் அதிகரித்து வரும் டிஜிட்டல் சூழலில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை - டாக்டர் ரூமி...

இலங்கையில் அதிகரித்து வரும் டிஜிட்டல் சூழலில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை – டாக்டர் ரூமி ரூபன்

இலங்கையில் அதிகரித்து வரும் டிஜிட்டல் சூழலில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு வலுவான நடவடிக்கைகள் தேவை என்பதை, அதிகப்படியான ஒன்லைன் விளையாட்டு, இணையவழி அச்சுறுத்தல் (cyberbullying) மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களின் தாக்கம் குறித்த அதிகரித்து வரும் கவலைகள் சுட்டிக்காட்டுகின்றன என மனநல மருத்துவர் டாக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

ஒன்லைனில் நீண்ட நேரம் செலவிடும் குழந்தைகள் கேமிங் அடிமைத்தனம், தெரியாத நபர்களால் தொந்தரவு, இணையவழி அச்சுறுத்தல் மற்றும் சூதாட்டம் தொடர்பான உள்ளடக்கங்களின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளக் கூடும்.

மேலும் குழந்தைகளிடையே ஒன்லைன் விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன, ஆனால் அதிகப்படியான ஒன்லைன் விளையாட்டு அவர்களின் தூக்கம், கல்வி, சமூக உறவுகள் மற்றும் மனநலனைப் பாதிக்கலாம். சில சந்தர்ப்பங்களில், குழந்தைகள் அதன் நிதி விளைவுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் விளையாட்டுகளுக்கு பணம் செலவழிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள், செய்தி அனுப்பும் செயலிகள் மற்றும் ஆஒன்லைன் விளையாட்டு தளங்கள் மூலம் குழந்தைகள் அவமானங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவதால், இணையவழி அச்சுறுத்தலும் ஒரு பெரிய கவலையாக உருவெடுத்துள்ளது.

இதற்கிடையில், ஒன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட விளம்பரங்கள் அதிகளவில் தென்படுவதால், சிறிய வயதிலேயே குழந்தைகள் சூதாட்டம் தொடர்பான உள்ளடக்கங்களுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகளின் பரவலான பயன்பாடு, இளைஞர்கள் இத்தகைய உள்ளடக்கங்களை எளிதில் அணுகக் கூடிய வாய்ப்பை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் ஒன்லைன் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும், தீங்கு விளைவிக்கும் நடத்தைகளை எவ்வாறு கண்டறிவது, தவிர்ப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ரூபன் வலியுறுத்தினார்.

குழந்தைகள் பொருத்தமற்ற உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுப்பதிலும், ஒன்லைன் துஷ்பிரயோகத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பதிலும் அதிகாரிகளுக்கும் தொழில்நுட்பத் தளங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று அவர் கூறினார்.

இலங்கை குழந்தைகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், ஒன்லைன் சூழல் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விழிப்புணர்வு, பொறுப்பான பெற்றோர் மேற்பார்வை மற்றும் பயனுள்ள குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!