வவுனியா, வேப்பங்குளம் – சாஸ்திரிகூழங்குளம் அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்றைய தினம் சிறப்பான முறையில் இடம்பெற்ற மாம்பழத் திருவிழாவின் போது, மாம்பழம் ரூ. 500,005.00 எனும் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இம்மாம்பழத் திருவிழாவில், பல பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிலையில், திரு. இ.மோகனதாஸ் அவர்கள் ஐந்து லட்சத்து ஐந்து ரூபாவிற்கு (ரூ. 500,005.00) மாம்பழத்தை ஏலத்தில் தனதாக்கிக் கொண்டார்.



Recent Comments