நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் (09) விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வடக்கின் கல்விச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.


Recent Comments