Wednesday, February 5, 2025
Huisதாயகம்வவுனியாவில் தொலைபேசி கோபுரத்தில் ஏறிய நபருக்கு நேர்ந்த கதி..!

வவுனியாவில் தொலைபேசி கோபுரத்தில் ஏறிய நபருக்கு நேர்ந்த கதி..!

வவுனியா மகாரம்பைக்குளத்தில் தொலைபேசி கோபுரத்தை சீர்செய்யச் சென்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(01.02.2025) இடம்பெற்றுள்ளது.

அத்தே மஹகிரில்ல, நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய எச். எம். சுதேஷ் சதுரங்க ஹேரத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 50 மீற்றர் உயர தொலைபேசி கோபுரத்தின் பாகங்களை அகற்றும் போதே தொழில்நுட்ப உத்தியோகத்தர் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஊழியர்களுடன் தொலைபேசி கோபுரத்தில் ஏறி சில பாகங்களை அகற்றும் போது உதிரி பாகங்கள் அடங்கிய பையுடன் கீழே விழுந்துள்ளதாக பொலிசார் தெரவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!