Wednesday, February 5, 2025
Huisதாயகம்யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் 162 வெற்றிடங்கள் - அரச அதிபர்

யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் 162 வெற்றிடங்கள் – அரச அதிபர்

யாழ் .மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய தமது நிறுவனத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக யார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (31.01.2025) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,

யாழ், மாவட்டம் செயலகம் உற்பட அதன் கீழ் இயங்கும் 15 பிரதேச செயலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினருக்கு குறைவாக பின்வரும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டி உள்ளது.

நிர்வாக கிராம உத்தியோகத்தர் 06, கிராம உத்தியோத்தர்கள் 65, முகாமைத்துவ உதவியாளர்கள் 27, அலுவலக உதவியாளர்கள் 45, சாரதிகள் 12 மற்றும் மாவட்ட பதிவாளர் தின களத்தில் 08 பேர் உள்ளடங்களாக 162 ஆளணியினர் தேவைப்பாடு இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விடயத்திற்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி விரைவில் முப்பதாயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!