Tuesday, February 4, 2025
Huisதாயகம்வவுனியா தவசிகுளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்..!

வவுனியா தவசிகுளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்..!

வவுனியா, தவசிகுளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிக்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது குறித்த மைத்தானத்திற்குள் நுழைந்த சிலர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், விளையாட்டு நிகழ்வுக்கு வழங்கப்படவிருந்த வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் கதிரைகளையும் உடைத்துள்ளனர்.

காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!