Tuesday, February 4, 2025
Huisதாயகம்வேலை கிடைக்காததால் மன அழுத்தம்; யாழில் இளைஞன் செய்த விபரீத காரியம்..!

வேலை கிடைக்காததால் மன அழுத்தம்; யாழில் இளைஞன் செய்த விபரீத காரியம்..!

யாழில் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (04.02.2025) இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய தங்கவேல் விபுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்த இளைஞன் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் இன்றைய தினம்(04) தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் – கஜிந்தன்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!