Wednesday, May 21, 2025
Huisதாயகம்சட்டவிரோத போதைப்பொருள் பாவனை; 17 பொலிசார் சேவையிலிருந்து நீக்கம்..!

சட்டவிரோத போதைப்பொருள் பாவனை; 17 பொலிசார் சேவையிலிருந்து நீக்கம்..!

ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற சட்டவிரோத போதைப் பொருட்களை பயன்படுத்தியதால் கடந்த நான்கு மாதங்களில் 17 பொலிஸ் அதிகாரிகளை இலங்கை காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது.

புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இலங்கை காவல் துறையில் உள்ள அதிகாரிகளின் பட்டியலைத் தொகுத்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த அதிகாரிகளின் மருத்துவ அறிக்கைகள் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டன. வெளியாகிய முடிவுகளைத் தொடர்ந்து, குறித்த அதிகாரிகள் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகள் மீது விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்கா உறுதிப்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிரேஷட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!