Sunday, August 3, 2025
Huisதாயகம்உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் களமிறங்கும் ஐக்கிய தேசிய கட்சி..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் களமிறங்கும் ஐக்கிய தேசிய கட்சி..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி “யானை” சின்னத்தின் கீழ் பல மாநகர சபைகளுக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

சிறிகொத்தாவில் நேற்று (14.02) இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பல புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும், வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் “யானை” சின்னத்தின் கீழ் 04 மாநகர சபைகளுக்குப் போட்டியிட முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுக்கு பெரும்பான்மை ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!