Monday, March 9, 2026
Huisதாயகம்ஈரானிய கப்பல் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு..!

ஈரானிய கப்பல் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு..!

ஈரானியக் கப்பல்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானியர்கள் தொடர்பாக இலங்கை எடுக்கும் இறுதி முடிவுகள் நாட்டின் இறைமைக்கு உட்பட்டது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், IRIS Bushehr கப்பல் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச கடற்படை விதிகளுக்கு மதிப்பளிப்பதாக வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த இராஜதந்திர நகர்வு, பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் இலங்கையின் சுயாதிபத்திய உரிமையைச் சர்வதேச மட்டத்தில் பலப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், கடல்சார் விவகாரங்களில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புரிந்துணர்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!