Sunday, March 8, 2026
Huisதாயகம்வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் பொலிசாரால் கைது..!

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் பொலிசாரால் கைது..!

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் இன்று (08)தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் அசங்க(61867) ரன்வெல(61518) மிதுசன்(91800) நியாம்(84963) றொசான்(86009) ஆகியவர்களை கொண்ட காவல்துறை குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!