மலையக மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் கிடைத்ததே இலவசக் கல்வி என்பதால் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கி மாற்றத்தை கொண்டுவந்து அந்த மாற்றத்தின் அடிப்படையாக மக்களுக்கான காணி உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வீடமைப்பு திட்டத்திற்கு பதிலாக காணி உரிமை வழங்க வேண்டும் ‘பிச்சை கேட்கவில்லை நாங்கள் துணிந்துதான் கேட்கிறோம். காணி உரிமையை மக்களுக்கு வழங்குங்கள் என தெரிவித்துள்ளார்.
Recent Comments