1360 மில்லி கிராம் கேரள கஞ்சா மற்றும் 2.6 அங்குலம் கொண்ட கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் 4 மணிக்கு தியகலை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
ஹட்டன் பொலிசார் வீதி தடை இட்டு சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை தந்த பஸ் ஒற்றை சோதனையிட்ட போது பௌத்த பிக்குவிடமிருந்து கஞ்சா 1360 மில்லி கிராம் கஞ்சா சுருட்டு ஒன்றும் கைப்பற்றபட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யபட்டவர் 27 வயதுடைய கிரிமெட்டிய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவரை நாளை 3 ஆம் திகதி காலை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


Recent Comments