Thursday, August 7, 2025
Huisதாயகம்பல மில்லியன் ரூபாய்களை ஓவர்டைமில் ஏப்பம் விட்ட தொழிற் சங்கவாதிகள் - பிரதியமைச்சர் அருண்

பல மில்லியன் ரூபாய்களை ஓவர்டைமில் ஏப்பம் விட்ட தொழிற் சங்கவாதிகள் – பிரதியமைச்சர் அருண்

ஜே குணவர்தன என்ற நபர் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரைக்கும் 13,120 மணித்தியாலங்கள் ஓவர் டைம் செய்திருக்கிறார். அதற்காக அவர் 85 லட்சம் ரூபாய்களை கொடுப்பனவுத் தொகையாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார் என பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது,

நிஷாந்த் என்ற நபர் 2592 மணித்தியாலங்களை ஓவர்டைமாக செய்திருக்கிறார். 20 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை அவர் ஓவர் டைம் கொடுப்பானாக பெற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆர் கமகே என்ற ஒரு நபர் 13 ஆயிரத்து 900 மணித்தியாலங்களை ஓவர் டைம் ஆக செய்திருக்கிறார். இவர் 84 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றிருக்கிறார்.

அதேபோல பிரேமலால் என்று நபரும் 421 மணித்தியாலங்கள் ஓவர் டைம் செய்திருக்கிறார். 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை அவர் ஓவர் டைம் கொடுப்பனவாக பெற்று இருக்கிறார்.

அதுபோன்றே ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தொழிற் சங்கவாதியை எடுத்துக் கொண்டால் 2015 ,2016, 2017, 2018 ஆகிய நான்கு வருடங்களில் 5615 மணித்தியாலங்களுக்கு ஓவர்டைம் கொடுப்பனவாக 31 லட்சத்துக்கு அதிகமான தொகையை அவர் பெற்றிருக்கிறார்.

அவர் தொடர்பாக மேலும் ஒரு குற்றச்சாட்டு, அவர் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!