Saturday, January 24, 2026
Huisதாயகம்யாழில் இலஞ்சம் வாங்கிய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன்..!

யாழில் இலஞ்சம் வாங்கிய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன்..!

யாழ் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (03.03.2025) மதுபானம் பாவித்து விட்டு முரண்பாட்டில் ஈடுபட்டவேளை, யாழ் நகர் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த வழக்கினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் தடுப்பதாக கூறி யாழ் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுள்ளார்.

இருப்பினும், அந்த வழக்கானது நீதிமன்றுக்கு கொண்டு சென்ற நிலையில் அவருக்கான தண்டமாக 25 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இலஞ்சம் பெற்ற குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!