வவுனியாவில் இளம் குடும்ப பெண் ஒருவரை மிரட்டி தவறான முறைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று(06) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா – பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்ப பெண் ஒருவரை கடந்த 2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் அயலில் வசிக்கும் குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
அத்துடன், சந்தேக நபரான குடும்பஸ்தர் காணொளி ஒன்றை பதிவு செய்து அதனை வெளியிடுவதாக மிரட்டி குறித்த பெண்ணை மீண்டும் பல தடவை அழைத்து தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் கர்ப்பமான அந்த பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பூவரசன்குளம் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வந்த போதும், குற்றம் சாட்டப்பட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபர் நேற்று(06) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Recent Comments