Sunday, May 11, 2025
Huisதாயகம்மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!

2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி நடத்திய பிணைமுறி வெளியீட்டின் போது அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தால் இலங்கை மத்திய வங்கியில் பராமரிக்கப்படும் கணக்குகள் குறித்த அறிக்கையை அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியால் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி நடத்தப்பட்ட பிணைமுறி வெளியீட்டில் அரசாங்கத்திற்கு ரூ.688 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.

அதில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, இலங்கை மத்திய வங்கியில் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் பராமரிக்கும் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கையைப் பெற வேண்டும் என்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தலைமை நீதவான், இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அந்த குற்றச் செயல் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உட்பட 9 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!