கிழக்கு பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையிலேயே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வர்த்தகபிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வரும் நான்கு மாணவர்களுக்கிடையே வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியதையடுத்து ஒரு மாணவன் காயமடைந்துள்ளார். இதையடுத்து, காயமடைந்த மாணவன் ஏறாசவூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், காயமடைந்த மாணவன் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாடளித்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Recent Comments