யாழ் மாவட்ட வேட்புமனுத் தாக்கலில் அர்ச்சுனாவின் ஊசி.சின்னம் 17 சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை அர்ச்சுனா புலம்பெயர் தமிழர்களி்டமிருந்து தேர்தலுக்காக பெருமளவான பணத்தைப் பெற்ற பின் திட்டமிட்டு தேர்தல் மனுக்களில் தவறுகளை ஏற்படுத்தி ஏற்படவுள்ள பாரிய தோல்வியை மறைப்பதற்காக குறித்த நியமனப் பத்திரங்களை நிராகரிக்க வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக சமூகவலைத் தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் சந்திரசேகரனை படிப்பறிவு இல்லாதவர் என மட்டம் தட்டிக் கதைப்பது, மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளை படிப்பறிவு இல்லாதவர்கள், திட்டமிடல் தெரியாதவர்கள் என ஏசுவது, பாராளுமன்றத்தில் தமிழ் பிள்ளைகளை விபச்சாரிகள் என கதைப்பது என அறிவாளியாக திரிந்த உமக்கு ஒரு தேர்தல் படிவம் நிரப்ப தெரியவில்லையா?? அல்லது புலம்பெயர் தமிழர்களிடமிருந்து உமக்கு தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக வந்த பணத்தை நீர் கொள்ளை அடிப்பதற்காக இவ்வாறு தேர்தல் குளறுபடிகள் செய்தீரா? உம்மை நம்பி தேர்தலில் குதித்த அந்த அப்பாவிகளின் நிலை இனி என்னவாக இருக்கும் என முகநூல்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Recent Comments