நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் சமூக அமைப்பின் செயலாளர் தாஹா.ஐன்ஸ்டின் தெரிவித்தார்.
தான் ஏற்கனவே சபாநாயகரிடம் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் இதனால் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மா அதிபர் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.


Recent Comments