அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத் தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக குறித்த அரச அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை வவுனியா மாவட்டத்திலும் கல்வியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் வலயப் பணிப்பாளர் தேர்தல் திணைக்களத்தால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் அதிபர்களின் ஊடாக அழுத்தங்களைப் பியோகித்து தான்தோன்றிதனமான உள்ளக இடமாற்றங்களை வழங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Recent Comments