பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சாரதியாகச் செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Recent Comments