Thursday, June 26, 2025
Huisதாயகம்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மர்ம மரணம்; உடலில் காணப்பட்ட காயங்கள்..!

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மர்ம மரணம்; உடலில் காணப்பட்ட காயங்கள்..!

பசறை பொலிஸ் பிரிவின் உடகம பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி நேற்று இரவு சுகவீனம் காரணமாக பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்று பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பசறை உடுகம பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுமி என தெரிய வந்துள்ளது.

இந்த சிறுமி சுமார் ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் சளிக்கு பல சந்தர்ப்பங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவமனையின் மருத்துவர், அவரது உடலில் காயங்களின் அறிகுறிகள் இருப்பதாக கூறியதால், பொலிஸார் இந்த மரணத்தை சந்தேகத்திற்குரியதாக கருதுகின்றனர்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பசறை மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!