Wednesday, June 25, 2025
Huisதாயகம்ரஷ்ய தூதரக வெடிகுண்டு விவகாரம்; LAP-TOP பாஸ்வேட்டை தர மறுக்கும் ஜேர்மன் பெண்..!

ரஷ்ய தூதரக வெடிகுண்டு விவகாரம்; LAP-TOP பாஸ்வேட்டை தர மறுக்கும் ஜேர்மன் பெண்..!

கடந்த ஏப்ரல் 28ம் திகதி, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள், கொழும்பு பொலிசாரை தொடர்பு கொண்டு வெடிகுண்டு அச்சம் இருப்பதாக தெரிவிக்க. அங்கே பொலிசார் மோப்ப நாய்கள் குவிக்கப்பட்டது.

ராணுவத்தினரும் உதவிக்கு விரைந்தார்கள். ரஷ்ய தூதரகத்தில் விட்டுச் செல்லப்பட்ட லாப்-டொப்பே இதற்கு காரணம்.

அதில் வெடி குண்டு இருக்கலாம் என்று ரஷ்ய அதிகாரிகள் சந்தேகம் அடைந்ததால் இந்த பரபரப்பு ஏற்பட்டது. குறித்த லாப்-டொப் ஒரு ஜேர்மன் பிரஜையுடையது என்பது சினமன் கார்டன் பொலிசார் கண்டறிந்து அந்தப் பெண்ணை நேற்று கைது செய்து சுமார் 5 மணி நேரம் விசாரித்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் அந்தப் பெண் பேச மறுத்த காரணத்தால். ஜேர்மன் பாஷை தெரிந்த நபரை அழைத்து வந்து விசாரணை செய்யவேண்டிய நிலைக்கு பொலிசார் தள்ளப்பட்டனர்.

எனினும் எவ்வளவு கேட்டும் அவர் லாப்-டொப்பின் பாஸ்வேட்டை தர மறுத்து விட்டார். மேலும் தொடர்ந்து வெளிநாட்டு பிரஜை ஒருவரை கைது செய்து வத்திருக்க முடியாது. இதனால் பொலிசார் அவரை விடுவித்துள்ள நிலையில், அந்த லப்-டொப்பில் என்ன இருக்கிறது என்று ஆராய முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த ஜேர்மன் பிரஜை , ஏதாவது ஒரு நாட்டு உளவாளியாக இருக்க சந்தர்பம் உள்ளது என்ற கோண்டத்தில் பொலிசார் விசாரணைகளை தொடர்ந்து நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!