Monday, June 16, 2025
Huisதாயகம்நடவடிக்கை இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கை; போக்குவரத்து சங்கங்கள் எச்சரிக்கை..!

நடவடிக்கை இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கை; போக்குவரத்து சங்கங்கள் எச்சரிக்கை..!

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்கு படுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,

இதற்கான அனைத்து அதிகாரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்த சட்டமூலம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு, தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உட்பட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!